பாங்காக்: மியான்மர் நாட்டில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வரை பாதிப்பை சந்தித்துள்ளது.
மியான்மர் தலைநகர் நய்பியாடாவ் நகரிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் என்ற நகரில்தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்த நிலநடுக்கம் பாங்காக்கிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்ததாக இந்த நிலநடுக்கம் இருந்தாலும் கூட சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தாய்லாந்தின் வட பகுதி முழுவதும் பூகம்பத்தின் தாக்கம் இருந்தது. மெட்ரோ, ரயில் சேவைகளும் கூட பாதிக்கப்பட்டன. பாங்காங்க்கிலும், சீனாவின் யுனான் மாகாணத்திலும் பூகம்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.
பூகம்பத்தைத் தொடர்ந்து தாய்லாந்து பிரதமர் பெடோங்க்ட்ரான் சினாவத்ரா அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாங்காக்கில் பல கட்டடங்கள் இடிந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் பலரும் இதுதொடர்பான வீடியோக்கள் ஏராளமாக வந்தவண்ணம் உள்ளன.
மியான்மரில் இர்ரவாடி ஆற்றுப் பாலத்தின் மீது போடப்பட்டிருந்த பழமையான பாலம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}