மனிதனும் தெய்வமாகின்றான்.. அன்புக்கு பஞ்சமில்லை ..மனிதநேயமும் மறையவில்லை!

May 29, 2024,09:49 AM IST

- சுதாகரி


அப்பா பசிக்கிறது 

தவமிருந்து பெற்ற மகளின் குரல்.. 

மனதில் உள்ளதை

மறைக்காமல் சொல்ல 

ஈன்ற தாயும் இல்லாத

பத்து வயது சிறுமியவள்...


மகளின் பசிக்குரல் 

தந்தையின் மனதை பிசைய 

இருவரும் கைகோர்த்து 

அடைந்தனர் ஓர் அங்காடியை!


 


பரபரப்பில்லாத பகல் பொழுது அது ...

அங்காடியிலும் கூட்டம் குறைவு ...

சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டே ...

கொடுத்திருந்த மகளின் கையை சற்றி விலக்கி ...

சடுதியில் அங்கே வைத்திருந்த

ரொட்டி பாக்கெட்டை எடுத்துக் கொண்டே திரும்பிய தந்தையை 

தடுத்து நிறுத்தியது

கடை முதலாளியின் குரல்!


நடுங்கும் கைகளுடன்...

பதைத்த உள்ளத்துடன்...

கூனிக்குறுகிய தந்தை

சற்றே திரும்ப...

மகளோ நடந்தது அறியாமல்

பேதை மனதுடன்...

பசித்த வயிற்றுடன்...

தந்தையை பார்க்க...

தந்தையோ கடைக்காரரை பார்க்க...

கடைக்காரர் கையை அசைத்து 

மகளை அழைத்தார்...


அம்மா இங்கே வா!

கொடுத்த பணத்திற்கு

மீதியை பெறாமல் 

செல்கின்றீரே என்று சொல்லி

சிறிது பணத்தை குழந்தையின் 

கைகளில் திணித்தார் ...

அந்த அன்பு உள்ளம் கொண்டவர்!


திருட்டில் கூட நியாயம் கண்டு 

தந்தையின் பெருமையை குலைக்காமல் 

முகத்தில் கடுமையை காட்டாமல்

அடுத்த வேலைக்கு வழிகாட்டிய 

அந்த அன்பு உள்ளத்தை என்ன சொல்ல?


கடைக்காரரை வாழ்த்திய படியே 

கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு 

படியிறங்க எத்தனிக்கையில்

ஐயா நில்லுங்கள்!

கடையின் உள்ளிருந்து ஒரு குரல்!


ஒன்றும் புரியாமல் 

திரும்பிய அவரிடம் 

மூச்சிறைக்க

கையில் ஒரு மூட்டையுடன் 

ஓடி வந்தார் வாடிக்கையாளர்...

வாங்கிய அரிசியை விட்டுவிட்டு செல்கின்றீரே!


பதில் எதுவும் சொல்லும் முன்

திணிக்கப்பட்டது அரிசி மூட்டை!

வேண்டியவருக்கு நியாயமானதை

உணர்ந்து ஈயும் பண்பு!

இறைவா அது உன் செயல் அல்லவா?

மனிதன் இன்னும் சாகவில்லை!

தூணிலும் துரும்பிலும் 

காணும் இடமெங்கிலும் 

நீக்கமற நிறைந்திருக்கும் 

நீயும் பொய்யில்லை!

 

இல்லாதவர்க்கு ஒன்றை வழங்கும் போதும்

வருத்தமுற்றோரிடம் அன்பு காட்டும் போதும்!

துன்ப கண்ணீரை துடைத்து 

இன்பத் தோணியில் ஏற்றும் போதும்!

ஈடில்லா இறைவா! அங்கே 

உன் உருவம் பெறுகின்றான்!

மனிதனும் தெய்வமாகின்றான்!

அன்புக்கு பஞ்சமில்லை 

மனிதநேயமும் மறையவில்லை!

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்