மனிதனும் தெய்வமாகின்றான்.. அன்புக்கு பஞ்சமில்லை ..மனிதநேயமும் மறையவில்லை!

May 29, 2024,09:49 AM IST

- சுதாகரி


அப்பா பசிக்கிறது 

தவமிருந்து பெற்ற மகளின் குரல்.. 

மனதில் உள்ளதை

மறைக்காமல் சொல்ல 

ஈன்ற தாயும் இல்லாத

பத்து வயது சிறுமியவள்...


மகளின் பசிக்குரல் 

தந்தையின் மனதை பிசைய 

இருவரும் கைகோர்த்து 

அடைந்தனர் ஓர் அங்காடியை!


 


பரபரப்பில்லாத பகல் பொழுது அது ...

அங்காடியிலும் கூட்டம் குறைவு ...

சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டே ...

கொடுத்திருந்த மகளின் கையை சற்றி விலக்கி ...

சடுதியில் அங்கே வைத்திருந்த

ரொட்டி பாக்கெட்டை எடுத்துக் கொண்டே திரும்பிய தந்தையை 

தடுத்து நிறுத்தியது

கடை முதலாளியின் குரல்!


நடுங்கும் கைகளுடன்...

பதைத்த உள்ளத்துடன்...

கூனிக்குறுகிய தந்தை

சற்றே திரும்ப...

மகளோ நடந்தது அறியாமல்

பேதை மனதுடன்...

பசித்த வயிற்றுடன்...

தந்தையை பார்க்க...

தந்தையோ கடைக்காரரை பார்க்க...

கடைக்காரர் கையை அசைத்து 

மகளை அழைத்தார்...


அம்மா இங்கே வா!

கொடுத்த பணத்திற்கு

மீதியை பெறாமல் 

செல்கின்றீரே என்று சொல்லி

சிறிது பணத்தை குழந்தையின் 

கைகளில் திணித்தார் ...

அந்த அன்பு உள்ளம் கொண்டவர்!


திருட்டில் கூட நியாயம் கண்டு 

தந்தையின் பெருமையை குலைக்காமல் 

முகத்தில் கடுமையை காட்டாமல்

அடுத்த வேலைக்கு வழிகாட்டிய 

அந்த அன்பு உள்ளத்தை என்ன சொல்ல?


கடைக்காரரை வாழ்த்திய படியே 

கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு 

படியிறங்க எத்தனிக்கையில்

ஐயா நில்லுங்கள்!

கடையின் உள்ளிருந்து ஒரு குரல்!


ஒன்றும் புரியாமல் 

திரும்பிய அவரிடம் 

மூச்சிறைக்க

கையில் ஒரு மூட்டையுடன் 

ஓடி வந்தார் வாடிக்கையாளர்...

வாங்கிய அரிசியை விட்டுவிட்டு செல்கின்றீரே!


பதில் எதுவும் சொல்லும் முன்

திணிக்கப்பட்டது அரிசி மூட்டை!

வேண்டியவருக்கு நியாயமானதை

உணர்ந்து ஈயும் பண்பு!

இறைவா அது உன் செயல் அல்லவா?

மனிதன் இன்னும் சாகவில்லை!

தூணிலும் துரும்பிலும் 

காணும் இடமெங்கிலும் 

நீக்கமற நிறைந்திருக்கும் 

நீயும் பொய்யில்லை!

 

இல்லாதவர்க்கு ஒன்றை வழங்கும் போதும்

வருத்தமுற்றோரிடம் அன்பு காட்டும் போதும்!

துன்ப கண்ணீரை துடைத்து 

இன்பத் தோணியில் ஏற்றும் போதும்!

ஈடில்லா இறைவா! அங்கே 

உன் உருவம் பெறுகின்றான்!

மனிதனும் தெய்வமாகின்றான்!

அன்புக்கு பஞ்சமில்லை 

மனிதநேயமும் மறையவில்லை!

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்