இந்தியாவுக்காக தொடர்ந்து போராடுவேன்.. எதற்கும் தயார்.. ராகுல் காந்தி ஆவேசம்

Mar 25, 2023,11:49 AM IST
சென்னை:  இந்தியாவின் குரலுக்காக தொடர்ந்து போராடுவேன்.. அதற்காக என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் அதற்கும் நான் தயார்தான் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான வழக்கின் தீர்ப்பு வெளியான அடுத்த நாளே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருப்பது காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்துள்ளது.



ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தைக் காப்போம் என்ற பெயரிலும் தேசிய அளவில் இயக்கத்தை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் இதில் இணைத்து பிரமாண்டமான அளவில் இதை நடத்தவும் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் தனது தகுதி நீக்கம் குறித்து நேற்று இரவு டிவீட் ஒன்றைப்போட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில், நான் இந்தியாவின் குரலுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். இதற்கு எந்த விலை கொடுக்கவும் நான் தயார் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இந்த வழக்கில் அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ராகுல் காந்தியின் எம்.பி பதவி மீண்டும் கிடைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்