இந்தியாவுக்காக தொடர்ந்து போராடுவேன்.. எதற்கும் தயார்.. ராகுல் காந்தி ஆவேசம்

Mar 25, 2023,11:49 AM IST
சென்னை:  இந்தியாவின் குரலுக்காக தொடர்ந்து போராடுவேன்.. அதற்காக என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் அதற்கும் நான் தயார்தான் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான வழக்கின் தீர்ப்பு வெளியான அடுத்த நாளே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருப்பது காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்துள்ளது.



ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தைக் காப்போம் என்ற பெயரிலும் தேசிய அளவில் இயக்கத்தை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் இதில் இணைத்து பிரமாண்டமான அளவில் இதை நடத்தவும் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் தனது தகுதி நீக்கம் குறித்து நேற்று இரவு டிவீட் ஒன்றைப்போட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில், நான் இந்தியாவின் குரலுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். இதற்கு எந்த விலை கொடுக்கவும் நான் தயார் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இந்த வழக்கில் அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ராகுல் காந்தியின் எம்.பி பதவி மீண்டும் கிடைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்