இந்தியாவுக்காக தொடர்ந்து போராடுவேன்.. எதற்கும் தயார்.. ராகுல் காந்தி ஆவேசம்

Mar 25, 2023,11:49 AM IST
சென்னை:  இந்தியாவின் குரலுக்காக தொடர்ந்து போராடுவேன்.. அதற்காக என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் அதற்கும் நான் தயார்தான் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான வழக்கின் தீர்ப்பு வெளியான அடுத்த நாளே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருப்பது காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்துள்ளது.



ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தைக் காப்போம் என்ற பெயரிலும் தேசிய அளவில் இயக்கத்தை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் இதில் இணைத்து பிரமாண்டமான அளவில் இதை நடத்தவும் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் தனது தகுதி நீக்கம் குறித்து நேற்று இரவு டிவீட் ஒன்றைப்போட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில், நான் இந்தியாவின் குரலுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். இதற்கு எந்த விலை கொடுக்கவும் நான் தயார் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இந்த வழக்கில் அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ராகுல் காந்தியின் எம்.பி பதவி மீண்டும் கிடைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்