- ரதிதேவி
என் வருகையை
விதை விதைத்து
எதிர்பார்ப்பவர் பலர்
நெகிழி யைப் புதைத்து
நான் வர முடியாமல்
தடுப்பவர்கள் சிலர்
ஆறறிவு மனிதா
என் தவறுதான் என்ன.....

வெண் மேகமான என்
தோழியை காயப்படுத்துகிறாய்
நீ ஆளும் தொழில் புகையால்......
மனிதா என் தவறுதான் என்ன
என் உயிர்நாடி யான
பசுமையைத் தீக்கிரையாக்கி
உன்னால் அனலில் எப்படி
வாழமுடிகிறது .....
நம் இருவருக்குமான
பூமித்தாயை
பொங்கியெழச் செய்து
நீயே வீழ்கிறாய் அவளின் கருவறைக்குள்......
மனிதா உன் தேவைதான் என்ன..........
உயிர் தாயின் மார்பிலே
குத்துகிறாய் AI என்ற
ஈட்டியால்.....
தாயானவள் தாரை வார்க்கிறாளே
என்னை
நீ உயிர் வாழ......
AI மனிதா உன் ஞானம் தான் என்ன..
மனமகிழ்வுடனும்
என்னை
அனலுடனும்
அமிலத்துடனும்
வரவைக்கிறாய்....
என்ன லாபமோ உனக்கு....
பொங்கியெழ வைக்கிறாய்
சாந்தமான என் உயிரான
ஆழியை.....
ஆறறிவு மனிதா உன் தேவைதான் என்ன?
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}