- ரதிதேவி
என் வருகையை
விதை விதைத்து
எதிர்பார்ப்பவர் பலர்
நெகிழி யைப் புதைத்து
நான் வர முடியாமல்
தடுப்பவர்கள் சிலர்
ஆறறிவு மனிதா
என் தவறுதான் என்ன.....

வெண் மேகமான என்
தோழியை காயப்படுத்துகிறாய்
நீ ஆளும் தொழில் புகையால்......
மனிதா என் தவறுதான் என்ன
என் உயிர்நாடி யான
பசுமையைத் தீக்கிரையாக்கி
உன்னால் அனலில் எப்படி
வாழமுடிகிறது .....
நம் இருவருக்குமான
பூமித்தாயை
பொங்கியெழச் செய்து
நீயே வீழ்கிறாய் அவளின் கருவறைக்குள்......
மனிதா உன் தேவைதான் என்ன..........
உயிர் தாயின் மார்பிலே
குத்துகிறாய் AI என்ற
ஈட்டியால்.....
தாயானவள் தாரை வார்க்கிறாளே
என்னை
நீ உயிர் வாழ......
AI மனிதா உன் ஞானம் தான் என்ன..
மனமகிழ்வுடனும்
என்னை
அனலுடனும்
அமிலத்துடனும்
வரவைக்கிறாய்....
என்ன லாபமோ உனக்கு....
பொங்கியெழ வைக்கிறாய்
சாந்தமான என் உயிரான
ஆழியை.....
ஆறறிவு மனிதா உன் தேவைதான் என்ன?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
{{comments.comment}}