- ரதிதேவி
என் வருகையை
விதை விதைத்து
எதிர்பார்ப்பவர் பலர்
நெகிழி யைப் புதைத்து
நான் வர முடியாமல்
தடுப்பவர்கள் சிலர்
ஆறறிவு மனிதா
என் தவறுதான் என்ன.....

வெண் மேகமான என்
தோழியை காயப்படுத்துகிறாய்
நீ ஆளும் தொழில் புகையால்......
மனிதா என் தவறுதான் என்ன
என் உயிர்நாடி யான
பசுமையைத் தீக்கிரையாக்கி
உன்னால் அனலில் எப்படி
வாழமுடிகிறது .....
நம் இருவருக்குமான
பூமித்தாயை
பொங்கியெழச் செய்து
நீயே வீழ்கிறாய் அவளின் கருவறைக்குள்......
மனிதா உன் தேவைதான் என்ன..........
உயிர் தாயின் மார்பிலே
குத்துகிறாய் AI என்ற
ஈட்டியால்.....
தாயானவள் தாரை வார்க்கிறாளே
என்னை
நீ உயிர் வாழ......
AI மனிதா உன் ஞானம் தான் என்ன..
மனமகிழ்வுடனும்
என்னை
அனலுடனும்
அமிலத்துடனும்
வரவைக்கிறாய்....
என்ன லாபமோ உனக்கு....
பொங்கியெழ வைக்கிறாய்
சாந்தமான என் உயிரான
ஆழியை.....
ஆறறிவு மனிதா உன் தேவைதான் என்ன?
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}