துபாய்: கணவர் ஷேக் மனா பின் முகமது அல்மக்தூமை, இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் விவாகரத்து செய்துள்ளார் துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள்தான் ஷேகா மஹ்ரா. சர்வதேச அரசியலில் செல்வாக்கு பெற்றவர். உலகில் அதிக சொத்து உள்ள முதல் 10 அரச குடும்பத்தை சேர்ந்தவர்களில் அல் மக்தூமுக்கு தனி இடம் உண்டு. இவரின் 2 மகள்களுள் ஒருவர் ஷேகா மஹ்ரா. இவருக்கு வயது 30 ஆகிறது.
ஷேகா மஹ்ரா இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த தலைப்பில் பட்டம் பெற்றுள்ளார். ஷேகா மஹ்ராவுக்கும், அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல்மக்தூமுக்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, அதுவும் பிறந்து 2 மாதங்கள் தான் ஆகிறது.
இந்நிலையில்,ஷேகா மஹ்ரா கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவகரத்து செய்வதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவிக்கிறேன். உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி" என அவர் பதிவிட்டிருப்பது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
மேலும், இந்த அறிவிப்பை அடுத்து, இருவருமே தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் முன்னர் பதிவிட்டு இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர். ஷேகா மஹ்ரா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழ், "நாங்கள் இருவர் மட்டும்" என்று எழுதி இருந்தார். இதற்கு இணையவாசிகள் எதற்காக இவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்று முனுமுனுத்து வந்த நிலையில், தற்போது எதற்கு என்பது உறுதியாகியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}