வாஷிங்டன்: நான் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை வெறுக்கவில்லை. அவருடைய கருத்து, பார்வைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவுதான். அவர் என்னுடைய எதிரி அல்ல. அவருடைய பார்வை வேறு. என்னுடைய பார்வை வேறு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்துப் பேசினார்.

ராகுல் காந்தி கூறுகையில், நான் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை வெறுக்கவில்லை. அவருடைய கருத்து பார்வைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவுதான். அவர் என்னுடைய எதிரி அல்ல. அவருடைய பார்வை வேறு. பாஜக வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முக்கிய கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன.
இந்தியா என்பது ஒரே கருத்தியல் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால், பல கருத்தியல்கள் சேர்ந்தது தான் இந்தியா என்பதை நாங்கள் நம்புகிறோம். சாதி வாரிய கணக்கெடுப்பு விவகாரம் என்பது மிகப்பெரிய விவகாரமும் அடிப்படை கேள்வியாகவும் உள்ளது.
நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்று இருந்தால் பாஜக 240 தொகுதிகளை நெருங்கியிருக்காது. அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராடி பெற்றி பெறுவோம். தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் விரும்பியது எல்லாம் செய்தது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் ஒருவிதமாகவும், பலமாக உள்ள மாநிலங்களில் ஒருவிதமாகவும் வடிவமைக்கப்பட்டன. எனவே அதை நான் நியாயமான தேர்தலாக கருதவில்லை. மாறாக அதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தேர்தலாகவே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}