வாஷிங்டன்: நான் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை வெறுக்கவில்லை. அவருடைய கருத்து, பார்வைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவுதான். அவர் என்னுடைய எதிரி அல்ல. அவருடைய பார்வை வேறு. என்னுடைய பார்வை வேறு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்துப் பேசினார்.

ராகுல் காந்தி கூறுகையில், நான் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை வெறுக்கவில்லை. அவருடைய கருத்து பார்வைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவுதான். அவர் என்னுடைய எதிரி அல்ல. அவருடைய பார்வை வேறு. பாஜக வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முக்கிய கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன.
இந்தியா என்பது ஒரே கருத்தியல் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால், பல கருத்தியல்கள் சேர்ந்தது தான் இந்தியா என்பதை நாங்கள் நம்புகிறோம். சாதி வாரிய கணக்கெடுப்பு விவகாரம் என்பது மிகப்பெரிய விவகாரமும் அடிப்படை கேள்வியாகவும் உள்ளது.
நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்று இருந்தால் பாஜக 240 தொகுதிகளை நெருங்கியிருக்காது. அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராடி பெற்றி பெறுவோம். தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் விரும்பியது எல்லாம் செய்தது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் ஒருவிதமாகவும், பலமாக உள்ள மாநிலங்களில் ஒருவிதமாகவும் வடிவமைக்கப்பட்டன. எனவே அதை நான் நியாயமான தேர்தலாக கருதவில்லை. மாறாக அதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தேர்தலாகவே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}