உண்மையில் மோடி என் எதிரி அல்ல.. அவரை வெறுக்கவும் இல்லை.. அமெரிக்காவில் மனம் திறந்த ராகுல் காந்தி

Sep 10, 2024,06:10 PM IST

வாஷிங்டன்:   நான் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை வெறுக்கவில்லை. அவருடைய கருத்து, பார்வைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவுதான். அவர் என்னுடைய எதிரி அல்ல. அவருடைய பார்வை வேறு. என்னுடைய பார்வை வேறு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்துப் பேசினார்.




ராகுல் காந்தி கூறுகையில்,  நான் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை வெறுக்கவில்லை. அவருடைய கருத்து பார்வைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவுதான். அவர் என்னுடைய எதிரி அல்ல. அவருடைய பார்வை வேறு. பாஜக வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முக்கிய கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன.


இந்தியா என்பது ஒரே கருத்தியல் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால், பல கருத்தியல்கள் சேர்ந்தது தான் இந்தியா என்பதை நாங்கள் நம்புகிறோம். சாதி வாரிய கணக்கெடுப்பு விவகாரம் என்பது மிகப்பெரிய விவகாரமும் அடிப்படை கேள்வியாகவும் உள்ளது. 


நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்று இருந்தால் பாஜக 240 தொகுதிகளை நெருங்கியிருக்காது. அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராடி பெற்றி பெறுவோம். தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் விரும்பியது எல்லாம் செய்தது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் ஒருவிதமாகவும், பலமாக உள்ள மாநிலங்களில் ஒருவிதமாகவும் வடிவமைக்கப்பட்டன. எனவே அதை நான் நியாயமான தேர்தலாக கருதவில்லை. மாறாக அதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தேர்தலாகவே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்