சென்னை: எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் உற்சாகத்துடன் இல்லை என எழுதுபவர்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்று அயலகத் தமிழர் தின விழாவில் கலந்து கொண்டு பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் ஆண்டுதோறும், தமிழ் வெல்லும் எனும் தலைப்பில் அயலகத் தமிழர் தின விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
எனது கிராமம் என்கிற திட்டத்தை அவர் அப்போது தொடங்கி வைத்தார். மாநாட்டில் கணியன் பூங்குன்றனார் பெயரில் 13 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கினார். பின்னர் முதல்வர் பேசும்போது, கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வந்துருச்சு. பொங்கல் பரிசு வந்திருச்சு, பொங்கலுக்கும் ரூ.1000 வந்துருச்சு. வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் வந்திருச்சு என ஒரு பெண்மணி கூறியிருக்கிறார். இது தான் எனக்கு மகிழ்ச்சி.
இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும். எனக்கு உடல்நிலை சரியில்லை. உற்சாகமாக இல்லை என எழுதியிருந்தார்கள். அதை படிக்கும்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. எனக்கு என்ன குறை. தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைவிட எனக்கு என்ன வேண்டும். மக்களை பற்றி தான் எப்போதும் என்னுடைய நினைப்பு இருக்கும்.
என்னை பற்றி நினைத்ததில்லை. உங்கள் முகத்தை பார்க்கும் போது மகிழ்ச்சி தான் எனக்கு உற்சாக மருந்து. அயலகத் தமிழர்கள் நலத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}