மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

Nov 22, 2024,06:56 PM IST

சென்னை: தவெக மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். என் மகன் மேடையில் பேசியதை பார்த்து என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன் என்று தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தற்போது தவெக தலைவராக மாறி அரசியல் அரங்கை கலங்கடித்து வருவதற்கு  முக்கிய காரணமாக இருந்தது விஜய் நடத்திய மாநாடும், அதில் அவர் பேசிய பேச்சும் என்றே சொல்லலாம். விக்கிரவாண்டி மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் 45 நிமிடங்கள் உரையாற்றினார் விஜய். அப்போது திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். 




விஜய்யின் ஆக்ரோஷ பேச்சைப் பார்த்து தொண்டர்களே மிரண்டு விட்டனர். உற்சாகத்தில் மிதந்தனர். சாப்ட்டாக பேசக் கூடியவர் என்று நினைத்திருந்த விஜய் அதிரடியாக பேசியது அவர்களை ஆச்சரியப்படுத்தி விட்டது. அந்த அளவிற்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய்யின் பேச்சு இருந்தது. மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை அவர் பேசிய பேச்சு குறித்து விவாதங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய் பேச்சு குறித்து அவரவர் கருத்துக்களை இன்றளவும் பதிவு செய்து வருகின்றனர்.


இந்நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மாநாட்டில் பேசியதை பார்த்து பிரமித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியின்போது கூறுகையில், மாநாட்டில் என் மகன் கலக்கிவிட்டார். அவர் இப்படி பேசுவார் என நான் நினைக்கவே இல்லை. அரண்டு மிரண்டு போயிட்டேன். என் மகனின் வேகத்தை அன்று தான் பார்த்தேன். 


சினிமாவில் நடிப்பார் எனக்கு தெரியும். ஆனால் மேடையில், இப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை. முதலில் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். பின்பு என்னையும் அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்து தான் அப்படி விஜய் பேச வைத்தது  என்று நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்