சென்னை: தவெக மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். என் மகன் மேடையில் பேசியதை பார்த்து என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன் என்று தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தற்போது தவெக தலைவராக மாறி அரசியல் அரங்கை கலங்கடித்து வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் நடத்திய மாநாடும், அதில் அவர் பேசிய பேச்சும் என்றே சொல்லலாம். விக்கிரவாண்டி மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் 45 நிமிடங்கள் உரையாற்றினார் விஜய். அப்போது திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

விஜய்யின் ஆக்ரோஷ பேச்சைப் பார்த்து தொண்டர்களே மிரண்டு விட்டனர். உற்சாகத்தில் மிதந்தனர். சாப்ட்டாக பேசக் கூடியவர் என்று நினைத்திருந்த விஜய் அதிரடியாக பேசியது அவர்களை ஆச்சரியப்படுத்தி விட்டது. அந்த அளவிற்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய்யின் பேச்சு இருந்தது. மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை அவர் பேசிய பேச்சு குறித்து விவாதங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய் பேச்சு குறித்து அவரவர் கருத்துக்களை இன்றளவும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மாநாட்டில் பேசியதை பார்த்து பிரமித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியின்போது கூறுகையில், மாநாட்டில் என் மகன் கலக்கிவிட்டார். அவர் இப்படி பேசுவார் என நான் நினைக்கவே இல்லை. அரண்டு மிரண்டு போயிட்டேன். என் மகனின் வேகத்தை அன்று தான் பார்த்தேன்.
சினிமாவில் நடிப்பார் எனக்கு தெரியும். ஆனால் மேடையில், இப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை. முதலில் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். பின்பு என்னையும் அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்து தான் அப்படி விஜய் பேச வைத்தது என்று நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}