சென்னை: தவெக மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். என் மகன் மேடையில் பேசியதை பார்த்து என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன் என்று தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தற்போது தவெக தலைவராக மாறி அரசியல் அரங்கை கலங்கடித்து வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் நடத்திய மாநாடும், அதில் அவர் பேசிய பேச்சும் என்றே சொல்லலாம். விக்கிரவாண்டி மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் 45 நிமிடங்கள் உரையாற்றினார் விஜய். அப்போது திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
விஜய்யின் ஆக்ரோஷ பேச்சைப் பார்த்து தொண்டர்களே மிரண்டு விட்டனர். உற்சாகத்தில் மிதந்தனர். சாப்ட்டாக பேசக் கூடியவர் என்று நினைத்திருந்த விஜய் அதிரடியாக பேசியது அவர்களை ஆச்சரியப்படுத்தி விட்டது. அந்த அளவிற்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய்யின் பேச்சு இருந்தது. மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை அவர் பேசிய பேச்சு குறித்து விவாதங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய் பேச்சு குறித்து அவரவர் கருத்துக்களை இன்றளவும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மாநாட்டில் பேசியதை பார்த்து பிரமித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியின்போது கூறுகையில், மாநாட்டில் என் மகன் கலக்கிவிட்டார். அவர் இப்படி பேசுவார் என நான் நினைக்கவே இல்லை. அரண்டு மிரண்டு போயிட்டேன். என் மகனின் வேகத்தை அன்று தான் பார்த்தேன்.
சினிமாவில் நடிப்பார் எனக்கு தெரியும். ஆனால் மேடையில், இப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை. முதலில் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். பின்பு என்னையும் அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்து தான் அப்படி விஜய் பேச வைத்தது என்று நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
{{comments.comment}}