சென்னை: சஞ்சய் தத் லியோ படத்தில் தனக்கு பெரிய ரோல் கொடுக்காதது பற்றி பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சஞ்சய் தத் சமீபத்தில் KD - The Devil டீசர் வெளியீட்டு விழாவில், லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் தனக்கு பெரிய ரோல் கொடுக்காததால் கோபமாக இருப்பதாக நகைச்சுவையாக கூறினார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சஞ்சய் சார் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு போன் செய்தார். நான் ஒரு ஃபன்னியான கமெண்ட் செஞ்சேன். ஆனா அதை கட் பண்ணி சோசியல் மீடியால போட்டதுக்கு அப்புறம் அது கொஞ்சம் awkward ஆகிடுச்சு'னு சொன்னார். நான் பரவாயில்லை சார்னு சொன்னேன்.
நான் ஒரு ஜீனியஸ் இல்ல. பெரிய பிலிம் மேக்கரும் இல்ல. மற்ற கேரக்டர்களை overshadow பண்ற மாதிரி ஸ்டோரி எழுத எனக்கு தெரியாது. என் படங்களில் நிறைய தப்பு செஞ்சிருக்கேன். இன்னும் கத்துக்கிட்டு தான் இருக்கேன். சஞ்சய் தத்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பேன். அதுல சரியா பண்ணிடுவேன் என்று லோகேஷ் கூறினார்.
லியோ திரைப்படம் A History of Violence என்ற ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. சஞ்சய் தத் லியோ படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். இருப்பினும், விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவத்தை அவர் பாராட்டினார். "நான் தளபதி விஜய்யுடன் வேலை செய்தேன். அவருடன் வேலை செய்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா லோகேஷ் என் ரோலை சரியா பயன்படுத்தல. அதனால அவர் மேல எனக்கு கோபம்" என்று சஞ்சய் தத் கூறினார்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திரா ராவ், ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், அமீர்கான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}