பாகிஸ்தான் போட்டியின்போது "காவி யூனிபார்ம்" போடுமா இந்தியா ?

Oct 09, 2023,06:05 PM IST

டெல்லி: இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆடும்போது காவி நிற யூனிபார்ம் அணிந்து ஆடலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.


உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. நேற்று சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா அபாரமாக பீல்டிங் மற்றும் சேசிங் செய்து வெற்றி பெற்று அசத்தியது.




இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை ரசிக்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துள்ளனர்.


இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி காவி நிற சீருடை அணிந்து விளையாடப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கெளரவ பொருளாளர் ஆசிஷ் ஷெலர் மறுத்துள்ளார்


இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற செய்திகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம். அப்படி எந்தத் திடடமும் எங்களிடம் இல்லை. இவை அடிப்படையே இல்லாத கற்பனைச் செய்தியாகும். இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டிகளில் முழுமையாக நீல நிற உடையில்தான் பங்கேற்கும் என்றார் அவர்.



அதேசமயம், கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய அணி மாற்று சீருடை அணிந்து விளையாடியது. வழக்கமான நீல நிற உடைக்குப் பதில் கரு நீல நிற சீருடையில், சட்டை ஓரத்தில் ஆரஞ்சு (காவி) நிற பட்டையுடனான சீருடை அணிந்து இந்தியா விளையாடியது என்பது நினைவிருக்கலாம்.


தற்போது இந்திய அணியின் போட்டியில் பங்கேற்காத சமயங்களில் பயன்படுத்தும் சீருடை காவி நிறத்தில்தான் உள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சீருடை நிறத்தை மாற்ற வேண்டும். எப்போதும் போல நீல நிற உடையில் இந்திய அணி காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்