டெல்லி: இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆடும்போது காவி நிற யூனிபார்ம் அணிந்து ஆடலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. நேற்று சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா அபாரமாக பீல்டிங் மற்றும் சேசிங் செய்து வெற்றி பெற்று அசத்தியது.
இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை ரசிக்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி காவி நிற சீருடை அணிந்து விளையாடப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கெளரவ பொருளாளர் ஆசிஷ் ஷெலர் மறுத்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற செய்திகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம். அப்படி எந்தத் திடடமும் எங்களிடம் இல்லை. இவை அடிப்படையே இல்லாத கற்பனைச் செய்தியாகும். இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டிகளில் முழுமையாக நீல நிற உடையில்தான் பங்கேற்கும் என்றார் அவர்.
அதேசமயம், கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய அணி மாற்று சீருடை அணிந்து விளையாடியது. வழக்கமான நீல நிற உடைக்குப் பதில் கரு நீல நிற சீருடையில், சட்டை ஓரத்தில் ஆரஞ்சு (காவி) நிற பட்டையுடனான சீருடை அணிந்து இந்தியா விளையாடியது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது இந்திய அணியின் போட்டியில் பங்கேற்காத சமயங்களில் பயன்படுத்தும் சீருடை காவி நிறத்தில்தான் உள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சீருடை நிறத்தை மாற்ற வேண்டும். எப்போதும் போல நீல நிற உடையில் இந்திய அணி காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}