பாகிஸ்தான் போட்டியின்போது "காவி யூனிபார்ம்" போடுமா இந்தியா ?

Oct 09, 2023,06:05 PM IST

டெல்லி: இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆடும்போது காவி நிற யூனிபார்ம் அணிந்து ஆடலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.


உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. நேற்று சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா அபாரமாக பீல்டிங் மற்றும் சேசிங் செய்து வெற்றி பெற்று அசத்தியது.




இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை ரசிக்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துள்ளனர்.


இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி காவி நிற சீருடை அணிந்து விளையாடப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கெளரவ பொருளாளர் ஆசிஷ் ஷெலர் மறுத்துள்ளார்


இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற செய்திகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம். அப்படி எந்தத் திடடமும் எங்களிடம் இல்லை. இவை அடிப்படையே இல்லாத கற்பனைச் செய்தியாகும். இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டிகளில் முழுமையாக நீல நிற உடையில்தான் பங்கேற்கும் என்றார் அவர்.



அதேசமயம், கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய அணி மாற்று சீருடை அணிந்து விளையாடியது. வழக்கமான நீல நிற உடைக்குப் பதில் கரு நீல நிற சீருடையில், சட்டை ஓரத்தில் ஆரஞ்சு (காவி) நிற பட்டையுடனான சீருடை அணிந்து இந்தியா விளையாடியது என்பது நினைவிருக்கலாம்.


தற்போது இந்திய அணியின் போட்டியில் பங்கேற்காத சமயங்களில் பயன்படுத்தும் சீருடை காவி நிறத்தில்தான் உள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சீருடை நிறத்தை மாற்ற வேண்டும். எப்போதும் போல நீல நிற உடையில் இந்திய அணி காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்