சூப்பர் நியூஸ்.. இனி வந்தே பாரத் ரயிலில் படுத்துக் கொண்டே பயணிக்கலாம்!

Sep 16, 2023,05:19 PM IST

சென்னை: இந்தியாவின் அதி விரைவு ரயிலாக வர்ணிக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் கோச் வசதி வரவுள்ளது. ஸ்லீப்பர் கோச்சுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடவுள்ளது.


இந்தியாவின் அதி வேக ரயிலாக அறியப்படுவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  ரயிலாகும். இந்த ரயில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. குறுகிய  தூரத்தில் இந்த ரயில்கள் முக்கிய நகரங்களை சென்றடைவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.




வந்தே பாரத் ரயில்களில் தற்போது அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில்களிலும் ஸ்லீப்பர் கோச்களை இணைக்கவுள்ளனர். இந்த புதிய படுக்கை வசதியுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கி வருகிறது.


முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா கூறியுள்ளார்.  ஐசிஎப்பில் வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் கூட தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும். குறுகிய தூரத்திலான நகரங்களுக்கு இடையே இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படும். முதல் ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தயாராகி விடுமாம்.

சமீபத்திய செய்திகள்

news

வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?

news

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்

news

Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?

news

அழகு மயில்!

news

என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)

news

மதியொளி முகமோ!

news

குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்