சூப்பர் நியூஸ்.. இனி வந்தே பாரத் ரயிலில் படுத்துக் கொண்டே பயணிக்கலாம்!

Sep 16, 2023,05:19 PM IST

சென்னை: இந்தியாவின் அதி விரைவு ரயிலாக வர்ணிக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் கோச் வசதி வரவுள்ளது. ஸ்லீப்பர் கோச்சுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடவுள்ளது.


இந்தியாவின் அதி வேக ரயிலாக அறியப்படுவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  ரயிலாகும். இந்த ரயில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. குறுகிய  தூரத்தில் இந்த ரயில்கள் முக்கிய நகரங்களை சென்றடைவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.




வந்தே பாரத் ரயில்களில் தற்போது அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில்களிலும் ஸ்லீப்பர் கோச்களை இணைக்கவுள்ளனர். இந்த புதிய படுக்கை வசதியுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கி வருகிறது.


முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா கூறியுள்ளார்.  ஐசிஎப்பில் வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் கூட தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும். குறுகிய தூரத்திலான நகரங்களுக்கு இடையே இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படும். முதல் ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தயாராகி விடுமாம்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்