சென்னை: இந்தியாவின் அதி விரைவு ரயிலாக வர்ணிக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் கோச் வசதி வரவுள்ளது. ஸ்லீப்பர் கோச்சுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடவுள்ளது.
இந்தியாவின் அதி வேக ரயிலாக அறியப்படுவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. குறுகிய தூரத்தில் இந்த ரயில்கள் முக்கிய நகரங்களை சென்றடைவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.
வந்தே பாரத் ரயில்களில் தற்போது அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில்களிலும் ஸ்லீப்பர் கோச்களை இணைக்கவுள்ளனர். இந்த புதிய படுக்கை வசதியுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கி வருகிறது.
முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா கூறியுள்ளார். ஐசிஎப்பில் வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் கூட தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும். குறுகிய தூரத்திலான நகரங்களுக்கு இடையே இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படும். முதல் ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தயாராகி விடுமாம்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}