சென்னை: இந்தியாவின் அதி விரைவு ரயிலாக வர்ணிக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் கோச் வசதி வரவுள்ளது. ஸ்லீப்பர் கோச்சுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடவுள்ளது.
இந்தியாவின் அதி வேக ரயிலாக அறியப்படுவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. குறுகிய தூரத்தில் இந்த ரயில்கள் முக்கிய நகரங்களை சென்றடைவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

வந்தே பாரத் ரயில்களில் தற்போது அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில்களிலும் ஸ்லீப்பர் கோச்களை இணைக்கவுள்ளனர். இந்த புதிய படுக்கை வசதியுடன் கூடிய ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கி வருகிறது.
முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா கூறியுள்ளார். ஐசிஎப்பில் வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் கூட தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும். குறுகிய தூரத்திலான நகரங்களுக்கு இடையே இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படும். முதல் ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தயாராகி விடுமாம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}