அணுகுண்டு யுத்தம் வெடித்தால்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து.. பாதுகாப்பான நாடுகள்!

Feb 11, 2023,04:11 PM IST
டெல்லி: அணு குண்டுகள் வெடித்து உலகில் அணு யுத்தம் நேரிட்டு பூமி மொத்தமும் அழிந்தாலும் கூட, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் மூலம் மனித இனம் தழைத்தோங்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



இந்த இரு நாடுகளும் அணுப் பேரழிவைத் தாங்கும் வல்லமை கொண்டவையாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Risk Analysis என்ற இதழில் இதுதொடர்பாக விஞ்ஞானிகளின் கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது. 

இந்த ஆய்வில், உலகில் அணு யுத்தம் ஏற்பட்டு மனித இனத்திற்குப் பெரும் மிரட்டல் வந்தாலும் கூட உலகில் உள்ள  சில தீவு நாடுகளில் மனித இனம் தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளது. அத்தகையாக நாடுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, சாலமன் தீவுகள், வனாட்டு ஆகியவை உள்ளன.

இந்த நாடுகளில் உள்ள மக்கள் அணு யுத்தப் பேரழிவிலிருந்து தப்பும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உலகம் முழுவதும் மனித இனத்தின் வாழ்வுக்கு பெரும் மிரட்டல் ஏற்பட்டாலும் கூட இந்த தீவுகளில் மக்கள் தப்ப வாய்ப்புகள் அதிகம். உலகில் அணு யுத்தம் வெடித்தால் எந்த நாடுகள் அதிலிருந்து  தப்பும் என்பதை ஆராய்வதற்காக 38 தீவு நாடுகளில் ஆய்வுகள் நடந்தன.  13 காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடந்தது. அதில் மேற்கண்ட தீவு நாடுகள்தான் மிகவும் பாதுகாப்பானவை  என்று தெரிய வந்ததாம்.

இதில் ஆஸ்திரேலியாதான் மிகவும் பாதுகாப்பான நாடாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு உணவு உற்பத்தி மிகச் சிறப்பாக உள்ளது. எனவே உணவு சப்ளை பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை. பல கோடி மக்களுக்கு கொடுக்கக் கூடிய அளவுக்கு இங்கு உணவு உற்பத்தி அபரிமிதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படமைக் கட்டமைப்பும், மின்சக்தியும், சுகாதார சேவையும், பாதுகாப்பும் மிகச் சிறப்பாக உள்ள நாடாகாவும் ஆஸ்திரேலியா திகழ்கிறது.

அதேசமயம், ஆஸ்திரேலியாவுக்குப் பாதகமாக இரண்டு விஷயங்கள் உள்ளன. அந்த நாடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் வைத்துள்ள நெருக்கமான நட்புதான் அது. அந்த நட்பு காரணமாக, இந்த இரு நாடுகளின் எதிரிகளால் ஆஸ்திரேலியாவும் குறி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மறுபக்கம் நியூசிலாந்து நாடு. இது  நீண்ட காலமாகவே அணு ஆயுதங்களுக்கு எதிராக உள்ள நாடு. மேலும் இந்த நாட்டுக்கு எதிரிகள் என்று பெரும்பாலும் கிடையாது. உணவு உற்பத்தி உள்ளிட்ட பலவற்றிலும் தன்னிறைவு பெற்ற நாடு. எனவே பெரும் அணு யுத்தம் வெடித்தாலும் நியூசிலாந்து சமாளித்து விடும் என்று சொல்கிறார்கள்.

உலகப் பெரும் அணு யுத்தம் வெடித்தால்  அமெரிக்கா, சீனா, ரஷ்யாவில் உணவு உற்பத்தியானது 97 சதவீதம் அளவுக்கு பாதிப்பை சந்திக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்