அணுகுண்டு யுத்தம் வெடித்தால்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து.. பாதுகாப்பான நாடுகள்!

Feb 11, 2023,04:11 PM IST
டெல்லி: அணு குண்டுகள் வெடித்து உலகில் அணு யுத்தம் நேரிட்டு பூமி மொத்தமும் அழிந்தாலும் கூட, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் மூலம் மனித இனம் தழைத்தோங்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



இந்த இரு நாடுகளும் அணுப் பேரழிவைத் தாங்கும் வல்லமை கொண்டவையாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Risk Analysis என்ற இதழில் இதுதொடர்பாக விஞ்ஞானிகளின் கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது. 

இந்த ஆய்வில், உலகில் அணு யுத்தம் ஏற்பட்டு மனித இனத்திற்குப் பெரும் மிரட்டல் வந்தாலும் கூட உலகில் உள்ள  சில தீவு நாடுகளில் மனித இனம் தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளது. அத்தகையாக நாடுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, சாலமன் தீவுகள், வனாட்டு ஆகியவை உள்ளன.

இந்த நாடுகளில் உள்ள மக்கள் அணு யுத்தப் பேரழிவிலிருந்து தப்பும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உலகம் முழுவதும் மனித இனத்தின் வாழ்வுக்கு பெரும் மிரட்டல் ஏற்பட்டாலும் கூட இந்த தீவுகளில் மக்கள் தப்ப வாய்ப்புகள் அதிகம். உலகில் அணு யுத்தம் வெடித்தால் எந்த நாடுகள் அதிலிருந்து  தப்பும் என்பதை ஆராய்வதற்காக 38 தீவு நாடுகளில் ஆய்வுகள் நடந்தன.  13 காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடந்தது. அதில் மேற்கண்ட தீவு நாடுகள்தான் மிகவும் பாதுகாப்பானவை  என்று தெரிய வந்ததாம்.

இதில் ஆஸ்திரேலியாதான் மிகவும் பாதுகாப்பான நாடாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு உணவு உற்பத்தி மிகச் சிறப்பாக உள்ளது. எனவே உணவு சப்ளை பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை. பல கோடி மக்களுக்கு கொடுக்கக் கூடிய அளவுக்கு இங்கு உணவு உற்பத்தி அபரிமிதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படமைக் கட்டமைப்பும், மின்சக்தியும், சுகாதார சேவையும், பாதுகாப்பும் மிகச் சிறப்பாக உள்ள நாடாகாவும் ஆஸ்திரேலியா திகழ்கிறது.

அதேசமயம், ஆஸ்திரேலியாவுக்குப் பாதகமாக இரண்டு விஷயங்கள் உள்ளன. அந்த நாடு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் வைத்துள்ள நெருக்கமான நட்புதான் அது. அந்த நட்பு காரணமாக, இந்த இரு நாடுகளின் எதிரிகளால் ஆஸ்திரேலியாவும் குறி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மறுபக்கம் நியூசிலாந்து நாடு. இது  நீண்ட காலமாகவே அணு ஆயுதங்களுக்கு எதிராக உள்ள நாடு. மேலும் இந்த நாட்டுக்கு எதிரிகள் என்று பெரும்பாலும் கிடையாது. உணவு உற்பத்தி உள்ளிட்ட பலவற்றிலும் தன்னிறைவு பெற்ற நாடு. எனவே பெரும் அணு யுத்தம் வெடித்தாலும் நியூசிலாந்து சமாளித்து விடும் என்று சொல்கிறார்கள்.

உலகப் பெரும் அணு யுத்தம் வெடித்தால்  அமெரிக்கா, சீனா, ரஷ்யாவில் உணவு உற்பத்தியானது 97 சதவீதம் அளவுக்கு பாதிப்பை சந்திக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்