சென்னை: மாரி செல்வராஜ் ஊர்ல வெள்ளம் வந்தா அவரு போக கூடாதா? என்று கேள்வி எழுப்பி அவரை விமர்சிப்போருக்கு பதிலடி கொடுத்துள்ளார் "வைகை புயல்" வடிவேலு.
தன் சொந்த ஊர் மக்களுக்காக ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மக்களை மீட்டு பத்திரமான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் இயக்குனர் மாரிசெல்வராஜ். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து மக்களை உலுக்கி விட்டது.
இவ்வளவு பெரிய மழை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தடாலடியாக வந்து ஒரு கலக்கு கலக்கி மக்களையும் கலங்க வைத்து விட்டு சென்றுள்ளது கனமழை. இந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தற்போது வேகம் பிடித்துள்ளன. பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இப்படி ஒரு பெரு வெள்ள பாதிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை பார்த்த இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது மன வேதனையை அறிக்கையாக வெளியிட்டிருந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இரவோடு இரவாக களத்தில் குதித்து, தன் சொந்த மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணியில் இறங்கினர்.
உள்ளூர் மக்களோடு இணைந்து அவர் பாதிக்கப்பட்டோரை மீட்டு படகுகளில் அனுப்பி வைத்தார். தனது எக்ஸ் தளத்தில், கருங்குளம் பஸ் ஸ்டாப் அருகே இரண்டு நாட்களாகச் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்... இப்போது வரை பத்து பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.. எல்லாரும் நிச்சயமாய் மீட்கப்படுவார்கள் உறவினர்கள் அச்சப்பட வேண்டாம் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அத்துடன் உதயநிதியின் பதிவில் அவருடன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் நின்றிருந்த படங்களையும் வெளியிடப்பட்டிருந்தார்.
அதை பார்த்த சிலர், மாரி செல்வராஜுக்கு அங்கு என்ன வேலை என்ற தொனியில் கேள்வியை முன்வைக்க ஆரம்பித்தனர். இதே பதிவில் சிலர் தரக்குறைவாக மாரி செல்வராஜின் செயலுக்கு பதிவிட்டனர். பலர் பலவிதங்களில் கமண்ட் செய்து வந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலு காரசாரமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், மாரி செல்வராஜ் ஊர்ல வெள்ளம் வந்தா அவரு போக கூடாதா? அவரு ஊர்டா இது. எங்க பள்ளம் இருக்கும், மேடு இருக்குனு அவனுக்கு தான் தெரியும். ஏ போகக்கூடாதா? இவ ஏன் போறானா... எவன் எந்த சந்துல கத்துறான்.. ஏன் கத்துறான்னு அவனுக்கு தான் தெரியும். என் ஊருக்கு வெள்ள வந்தா நான் போகக் கூடாதா.
இந்த மாதிரி சூழலில் ஒரு அணில் கொய்யாப் பழத்தை மரத்துல இருந்து தூக்கிப் போட்டாக் கூட அதுக்கு நாம நன்றி சொல்லணும்.. பூராம் தப்புத் தப்பா பேசறாய்ங்க.. என்று தனது பாணியில் சரவெடியாக பேசியுள்ளார் வடிவேலு.
கடைசில சாந்தமா இருக்கிற "புயலை"யே கோபப்படுத்திப் பாத்துட்டாய்ங்களே!
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}