மன அமைதியே வெற்றியின் வழி!
அழுத்தம் தன்னைக் கையாளத் தெரியாதவர்க்கு,
எதிர்காலம் என்பது என்றும் எட்டாக்கனியே!
அமைதி கொண்ட மனமே -
ஒரு வலிமையான நாளைச் செதுக்கும் உளியாகும்.
இன்றைய சுமைகளைத் தாங்கிப் பழகு,
நாளைய உயரத்தில் நீ வலிமையாய் எழுவாய்!
அமைதி குடிபுகும் எண்ணங்களில் தான்,
தன்னம்பிக்கை எனும் விதை துளிர்விடும்.

சமநிலை தவறாத ஒரு மனதிற்கு,
தடைகள் கூட முன்னேற்றத்தின் படிக்கட்டுகளே!
அமைதி எங்கு நிலைக்கிறதோ - அங்கே நம்பிக்கை தானாகவே கிளைவிட்டு வளரும்.
சலனமற்ற மனம் நல்விதியைத் தீர்மானிக்கும்,
உன் ஆற்றல் திறக்கப்பட மன அழுத்தம் விலகட்டும்!
மன அழுத்தம் என்பது ஒரு தற்காலிக மேகம்,
அதைத் துணிந்து கடப்பதே உண்மையான பலம்.
அமைதியான பாதையில் எதிர்காலம் எளிதாகும்,
உள்மன அமைதியே உனது வருங்காலக் கவசம்!
இன்று நீ காக்கும் நிதானம் ஒன்றே,
நாளை உனக்கு தலைசிறந்த வெற்றியைத் தரும்!
(About the Author.. V. RANJANI VEERA, GRADUATE TEACHER (ENGLISH), PONDICHERRY)
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்
விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!
விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி
தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ
ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு
{{comments.comment}}