WOW.. நாமெல்லாம் பேசிட்டிருந்த அந்த கேப்புல.. இளையராஜா என்ன செஞ்சு முடிச்சிருக்கார் பாருங்க!

May 16, 2024,07:09 PM IST

சென்னை: தன்னைப் பற்றி நாலாபுறமும் சுற்றிக் கொண்டிருந்த விமர்சனங்கள், வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இசைஞானி இளையராஜா சத்தமே இல்லாமல் ஒரு அதிரடியான வேலையைச் செய்து முடித்துள்ளார். அதாவது ஒரு சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறாராம் இளையராஜா. இதை அவரே சந்தோஷமாக அறிவித்துள்ளார்.


இசைஞானி இளையராஜா குறித்து சமீப நாட்களில் காரசாரமான விவாதங்கள் ஓடிக் கொண்டுள்ளன. சமீப காலமாக என்றில்லை. சில வருடங்களாகவே அவரைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள், விவாதங்கள் ஓடிக் கொண்டுதான் உள்ளன. ஆனால் எதையுமே அவர் கண்டு கொள்வதில்லை. அவரது வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தார்.


இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவைப் போட்டுள்ளார் இளையராஜா. அதில் அவர் கூறியுள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.. காரணம், மாபெரும் இசை விருந்து குறித்த தகவல்தான் அது. இளையராஜாவின் பேச்சிலிருந்து...




எல்லோருக்கும் வணக்கம். தினமும கேள்விப்படுகிறேன். என்னைப் பற்றி இது மாதிரி ஏராளமான வீடியோக்கள் வருகிறது என்று. எனக்கு வேண்டியவர்கள் வந்து சொல்வாங்க. நான் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஏன்னா மத்தவங்களைக் கவனிப்பது எனது வே்லை அல்ல. எனது வேலையைக் கவனிப்பதுதான் எனது வேலை. எனது வழியில் நான் கிளியராக, சுத்தமாக போய்க் கொண்டிருக்கிறேன். 


நீங்கள் எல்லாம் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடிச்சுட்டேன். பிலிம் சாங்ஸ் கொடுத்துக் கொண்டும், சில இடங்களுக்கும், விழாக்களுக்கும் சென்று தலையைக் காட்டி விட்டு இதெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக முடித்திருக்கிறேன். 4 மூவ்மென்ட்ஸ்களில், அதாவது சிம்பொனி என்றால் எப்படி இருக்குமோ அப்படி..  எழுதி முடித்து விட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை, எனக்கு சந்தோஷமான செய்தியை சொல்லிக் கொள்கிறேன். 


பிலிம் மிசியூசிக் வேற,  பேக்கிரவுண்ட் மியூசிக் வேற.. எல்லாம் அதில் ரிப்ளக்ட் ஆச்சுன்னா அது சிம்பொனி கிடையாது. ப்யூர் சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறேன். உங்களுக்கு, ரசிகர்களுக்கு, என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இளையராஜா.


இளையராஜாவின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இளையராஜா சிம்பொனியை எழுதுவது இது முதல் முறையல்ல. முன்பே கூட லண்டனில் ஒரு சிம்பொனி இசையை அவர் அமைத்தார். ஆனால் அது வெளிவரவில்லை. இந்த நிலையில் முழுக்க முழுக்க புது சிம்பொனியை அவர் எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார். இது இசை வடிவம் பெற்று வெளி வரும்போது மாபெரும் இசை விருந்தாக அது அமையும், இளையராஜாவின் இசை ஞானம் மேலும் புகழ் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.


இளையராஜாவின் அறிவிப்பு வீடியோ

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்