திருநெல்வேலி சீமையிலே.. ஜனவரி 17ம் தேதி இளையராஜாவின் இசை மழையைக் காணும் பொங்கல்!

Dec 02, 2024,11:18 AM IST

சென்னை: ஒட்டுமொத்த நெல்லைச் சீமையும் இசைப் பெருவிழா ஒன்றைக் காண இப்போதே குதூகலமாக தயாராகி வருகிறது. ஆமாங்க ஆமா.. இசைஞானி இளையராஜா தனது இசை நிகழ்ச்சியை ஜனவரி 17ம் தேதி அங்கு நடத்தவுள்ளார். 


ஜனவரி மாதம் என்றாலே உலகத் தமிழர்களுக்கு உற்சாகம் தரும் மாதம். குடும்பம் குடும்பமாக அந்த மாதத்துக்காக காத்திருப்பார்கள். காரணம், பொங்கல் திருவிழா வரும் மாதம் அல்லவா.. ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோலாகலமாக இருக்கும் பொங்கல் விழா.




14ம் தேதி போகி, 15ம் தேதி தைப் பொங்கல், 16ம் மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என்று மக்கள் உற்சாகமாகக் கொண்டாடிக் களிப்பார்கள். வழக்கமாக தைப் பொங்கல் சமயத்தில்தான் அதிக அளவிலான விடுமுறை கிடைக்கும் என்பதால் குடும்பம் குடும்பமாக இதைக் கொண்டாடி மகிழ்வது மக்களின் வழக்கம்.


இந்த நிலையில் நெல்லை மக்களுக்கு இந்த ஆண்டு காணும் பொங்கல்.. இசைஞானியைக் காணும் பொங்கலாக மலரப் போகிறது. ஜனவரி 17ம் தனது பிரமாண்ட இசைக் கச்சேரியை நெல்லையில் நடத்தப் போகிறார் இளையராஜா. பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் அருகே அண்ணாமலை நகரில் இந்த இசை விழா நடைபெறவுள்ளது.


இதுதொடர்பாக இளையராஜாவே  ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நெல்லையில் எனது ரசிகர்களைக் காண எனது இசைக் குழுவுடன், பாடகர்களுடன் நான் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


கடந்த செப்டம்பர் மாதம்தான் கும்பகோணத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார் இளையராஜா. அப்போது பெரிய மழை பெய்த போதிலும் கூட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தது இளையராஜாவை நெகிழ வைத்து விட்டது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும் என்று கூறியிருந்தார்.


அந்த வகையில் தற்போது நெல்லை சீமையை மகிழ வைக்க வருகிறார் இசைஞானி இளையராஜா. என்ன மக்கா.. இசை மழையில் நனையத் தயாரா??



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்