கிருஷ்ணன்புதூர், கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூரில் நடந்த இளவட்டக் கல் போட்டியில் பலரும் கலந்து கொண்டு கல்லைத் தூக்கி அசத்தினர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்குதல் தற்போது இளம் தலைமுறையினர் இடையே அதிகரித்து வருவது. இதுதொடர்பான போட்டிகளும் நடைபெற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. பெண்களும் கூட இதை தூக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பொதுவாக இது போன்ற போட்டிகள் ஊர் திருவிழாக்கள் அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூரில் மிஸ்டர் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன் மாஸ்டர் மூலமாக ஒரு போட்டி நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் இந்தப் போட்டியை தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் அகஸ்தீஸ்வரம் அரசுத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கவிஞர் சு. நாகராஜனும் கலந்து கொண்டு இளவட்டக் கல்லைத் தூக்கி
அசத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த மாவட்ட அளவிலான முதலாவது இளவட்டக் கல் தூக்கும் போட்டி இது என்பதால் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}