கிருஷ்ணன்புதூர், கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூரில் நடந்த இளவட்டக் கல் போட்டியில் பலரும் கலந்து கொண்டு கல்லைத் தூக்கி அசத்தினர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்குதல் தற்போது இளம் தலைமுறையினர் இடையே அதிகரித்து வருவது. இதுதொடர்பான போட்டிகளும் நடைபெற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. பெண்களும் கூட இதை தூக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பொதுவாக இது போன்ற போட்டிகள் ஊர் திருவிழாக்கள் அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூரில் மிஸ்டர் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன் மாஸ்டர் மூலமாக ஒரு போட்டி நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் இந்தப் போட்டியை தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் அகஸ்தீஸ்வரம் அரசுத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கவிஞர் சு. நாகராஜனும் கலந்து கொண்டு இளவட்டக் கல்லைத் தூக்கி
அசத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த மாவட்ட அளவிலான முதலாவது இளவட்டக் கல் தூக்கும் போட்டி இது என்பதால் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}