சென்னை: ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குட் பேட் அக்லி படத்தின் தயாரிப் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை சுருக்கமாக ஆங்கிலத்தில் GBU என்று என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. தற்போது வரை இந்த திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தப் படத்தில் இளையராஜா இசையில் வெளியான ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி சஞ்சள் குருவி, இளமை இதோ இதோ என்ற 3 பாடங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பாடல்களை தனது அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் ரூ.5 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் விளம்பர வீடியோவில் தனது இசையில் உருவான தங்க மகன் படத்தில் இடம் பெற்ற வா வா பக்கம் வா என்ற பாடலை பயன்படுத்தியதற்காக காப்புரிமை சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா.
அதே போல், கடந்த 2017ம் ஆண்டு பின்னணி பாடகர் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களை பாடியதற்காக நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா. இதையடுத்து எஸ்பிபியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இனிமேல் இளையராஜா பாடல்களை என்னுடைய கச்சேரிகளில் பாட மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அஜித் நடித்த குட் பேட் அட்லி படத்திற்கும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்படித்தக்கது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}