சென்னை: ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குட் பேட் அக்லி படத்தின் தயாரிப் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை சுருக்கமாக ஆங்கிலத்தில் GBU என்று என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. தற்போது வரை இந்த திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தப் படத்தில் இளையராஜா இசையில் வெளியான ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி சஞ்சள் குருவி, இளமை இதோ இதோ என்ற 3 பாடங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பாடல்களை தனது அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் ரூ.5 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் விளம்பர வீடியோவில் தனது இசையில் உருவான தங்க மகன் படத்தில் இடம் பெற்ற வா வா பக்கம் வா என்ற பாடலை பயன்படுத்தியதற்காக காப்புரிமை சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா.
அதே போல், கடந்த 2017ம் ஆண்டு பின்னணி பாடகர் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களை பாடியதற்காக நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா. இதையடுத்து எஸ்பிபியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இனிமேல் இளையராஜா பாடல்களை என்னுடைய கச்சேரிகளில் பாட மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அஜித் நடித்த குட் பேட் அட்லி படத்திற்கும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்படித்தக்கது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}