சென்னை: தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று 3 நாட்களுக்கு வெப்ப அலை நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மே 1ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் கடும் வெயில் வெளுத்துக் கொண்டிருக்கிறது. காலையிருந்து வெயில் வறுத்தெடுக்கிறது. இன்று தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக இடங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர்ந்து காாணப்பட்டது.

அதிகபட்சமாக 8 இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவானது. ஈரோட்டில், 42.4 டிகிரி செல்சியஸ், சேலம் 41.9 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 41.8, தர்மபுரி 41, கரூர் பரமத்தி 40.5, திருத்தணி 402, வேலூர் 401, நாமக்கல் 40 டிகிரி செல்சியஸ் என வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
உள் மாவட்டங்களில் பரவலாக 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகியிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸும் வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}