சென்னை: தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று 3 நாட்களுக்கு வெப்ப அலை நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மே 1ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் கடும் வெயில் வெளுத்துக் கொண்டிருக்கிறது. காலையிருந்து வெயில் வறுத்தெடுக்கிறது. இன்று தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக இடங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர்ந்து காாணப்பட்டது.

அதிகபட்சமாக 8 இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவானது. ஈரோட்டில், 42.4 டிகிரி செல்சியஸ், சேலம் 41.9 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 41.8, தர்மபுரி 41, கரூர் பரமத்தி 40.5, திருத்தணி 402, வேலூர் 401, நாமக்கல் 40 டிகிரி செல்சியஸ் என வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
உள் மாவட்டங்களில் பரவலாக 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகியிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸும் வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் டூ நிமிஷாம்பாள்.. மக்களின் மனம்!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!
The Healing Power of Laughter
சரணாகதி
My dear Grandma!
ரஜினியின் 'ஜெயிலர் 2'ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கம்!
மிடுக்கான பார்வை கண்டு திடுக்குன்னு தான் விழிக்கிறேன்!
ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம், வழக்குகள் வாபஸ்...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்
கோகுலாஷ்டமி .. பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் அற்புத பண்டிகை!
{{comments.comment}}