சென்னை: தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று 3 நாட்களுக்கு வெப்ப அலை நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மே 1ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் கடும் வெயில் வெளுத்துக் கொண்டிருக்கிறது. காலையிருந்து வெயில் வறுத்தெடுக்கிறது. இன்று தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக இடங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர்ந்து காாணப்பட்டது.

அதிகபட்சமாக 8 இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவானது. ஈரோட்டில், 42.4 டிகிரி செல்சியஸ், சேலம் 41.9 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 41.8, தர்மபுரி 41, கரூர் பரமத்தி 40.5, திருத்தணி 402, வேலூர் 401, நாமக்கல் 40 டிகிரி செல்சியஸ் என வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
உள் மாவட்டங்களில் பரவலாக 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகியிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸும் வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??
{{comments.comment}}