சென்னை: தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று 3 நாட்களுக்கு வெப்ப அலை நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மே 1ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் கடும் வெயில் வெளுத்துக் கொண்டிருக்கிறது. காலையிருந்து வெயில் வறுத்தெடுக்கிறது. இன்று தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக இடங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர்ந்து காாணப்பட்டது.

அதிகபட்சமாக 8 இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவானது. ஈரோட்டில், 42.4 டிகிரி செல்சியஸ், சேலம் 41.9 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 41.8, தர்மபுரி 41, கரூர் பரமத்தி 40.5, திருத்தணி 402, வேலூர் 401, நாமக்கல் 40 டிகிரி செல்சியஸ் என வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
உள் மாவட்டங்களில் பரவலாக 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகியிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸும் வெப்ப நிலை பதிவாகியிருந்தது.
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}