சென்னை: தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அக்னி நட்சத்திர காலத்தில் நிலவும் வெப்பம் சற்று தணிந்து குளுமை நிலவி வருகிறது.மேலும் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாலும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று:
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீச கூடும். மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 16 :
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 17:
நீலகிரி,கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை 3.4செமீ, பாம்பன் 2.6 செமீ, கோவையில் 2.3 செமீ, மழையும் பதிவானது. செய்யாறு மற்றும் பாளையங்கோட்டையில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவானது. கோவில்பட்டியில் 1.9 சென்டிமீட்டர் மழையும், திருச்சி சிறுகனூரில் 1.8 சென்டிமீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் 1.5 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
{{comments.comment}}