ஒன்னையே தாங்க முடியல.. இதுல ரெண்டா?.. ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு உருவாகிறது.. வானிலை மையம்

Oct 18, 2024,02:24 PM IST

சென்னை:   வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை ஆரம்பத்திலேயே தமிழகத்தை ஒரு தாக்கு தாக்கி சென்றுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில், அது ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தமிழகம் தப்பித்தது.




இந்தநிலையில், தற்போது வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில், அதுவும் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு பகுதியில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், அதனை தொடர்ந்து மத்திய வங்கக் கடலில் வரும் 22ம் தேதியன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும் என்றும், மேற்கு-வடக்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகி செல்லும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக அக்டோபர் 22ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.


எப்படியோ 2வது ரவுண்டிலும் நாம தப்பிச்சுருவோம் போல.. வரட்டும் வரட்டும்.. எத்தனை ரவுண்டு வந்தாலும் சமாளிப்போம்ல!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்