சென்னை: வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை ஆரம்பத்திலேயே தமிழகத்தை ஒரு தாக்கு தாக்கி சென்றுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில், அது ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தமிழகம் தப்பித்தது.
இந்தநிலையில், தற்போது வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில், அதுவும் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு பகுதியில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், அதனை தொடர்ந்து மத்திய வங்கக் கடலில் வரும் 22ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும் என்றும், மேற்கு-வடக்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகி செல்லும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக அக்டோபர் 22ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
எப்படியோ 2வது ரவுண்டிலும் நாம தப்பிச்சுருவோம் போல.. வரட்டும் வரட்டும்.. எத்தனை ரவுண்டு வந்தாலும் சமாளிப்போம்ல!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}