வருது வருது .. தென் மேற்குப் பருவ மழை.. மே 31ம் தேதியே கேரளாவில் தொடங்கும்.. வானிலை மையம் தகவல்!

May 15, 2024,10:10 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் மே 31ம் தேதியே தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே மழை தொடங்கவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வழக்கமாக ஜூன் 1ம் தேதி பருவ மழை கேரளாவில் தொடங்கும். ஆனால் தற்போது முன்கூட்டியே அது தொடங்கவுள்ளது. தென் மேற்குப் பருவ மழையானது கேரளாவில் தொடங்கி படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நான்கு மாத காலம்  வரை நீடிக்கும். நாட்டின் வருடாந்திர மழைப் பொழிவில் 70 சதவீத மழையானது இந்த தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில்தான் நமக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயத்திற்கும் நாட்டின் நீர் வளத்திற்கும் இந்த மழை மிக  முக்கியமானது.




ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்த மழை நீடிக்கும். பெரும்பாலான அணைக்கட்டுகள், நீர்த் தேக்கங்கள் இந்த மழையைத்தான் நம்பி உள்ளன. இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலான மழைப் பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கடந்த காலங்களில் 2017, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கேரளாவில் மே மாதத்தில் பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென் மேற்குப் பருவ மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்