திருவனந்தபுரம்: கேரளாவில் மே 31ம் தேதியே தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே மழை தொடங்கவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1ம் தேதி பருவ மழை கேரளாவில் தொடங்கும். ஆனால் தற்போது முன்கூட்டியே அது தொடங்கவுள்ளது. தென் மேற்குப் பருவ மழையானது கேரளாவில் தொடங்கி படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நான்கு மாத காலம் வரை நீடிக்கும். நாட்டின் வருடாந்திர மழைப் பொழிவில் 70 சதவீத மழையானது இந்த தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில்தான் நமக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயத்திற்கும் நாட்டின் நீர் வளத்திற்கும் இந்த மழை மிக முக்கியமானது.

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்த மழை நீடிக்கும். பெரும்பாலான அணைக்கட்டுகள், நீர்த் தேக்கங்கள் இந்த மழையைத்தான் நம்பி உள்ளன. இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலான மழைப் பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் 2017, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கேரளாவில் மே மாதத்தில் பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென் மேற்குப் பருவ மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}