சென்னை: ஏற்கனவே அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், வங்க கடலில் வரும் 27ஆம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு கொங்கன்- கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நாளை மாலை வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதன் காரணமாக தமிழகம், கேரளா, ஆந்திராவுக்கு இன்று முதல் ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதற்கிடையே மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி வருகின்ற மே 27ஆம் தேதி குறைந்த அழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் எனவும், இது அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைய கூடும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும். ஆனால் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்க இருப்பதால் அந்த சமயத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}