என்னது.. இம்ரான் கான் கல்யாணமே செல்லாதா?.. இதுக்கும் 7 ஆண்டு சிறை.. அடக் கொடுமையே!

Feb 04, 2024,07:04 AM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான வழக்குகளில் அடுத்தடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது திருமணமும் சட்டத்திற்கு புறம்பானது என சொல்லி, இதற்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீதும், அவரது மனைவி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீதும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட் அடுத்தடுத்து தீர்ப்பு வழங்கி வருகிறது. 71 வயதாகும் இம்ரான் கான் தற்போது சிறையில் இருந்து வருகிறார். 




நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தான் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருட்களை விற்றதாக இவரது மனைவி மற்றும் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா கானின் திருமணம் செல்லாது என்றும், திருமண சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. புஷ்ரா கான், இஸ்லாம் திருமண சட்டத்தின் படி முதல் கணவருடனான விவகாரத்து காலம் முடிவதற்கு முன்பாகவே இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டுள்ளார். 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ரகசியமான முறையில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக முதல் முறையாக பதவியேற்பதற்கு 7 மாதங்களுக்கு முன்பு தான் இம்ரான் கான் - புஷ்ரா கானின் திருமணம் நடந்துள்ளது.


திருமண சட்டத்தை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டது. முதலில் இதை மறுத்த இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, பிறகு சட்ட விரோதமாகவே இவர்களின் திருமணம் நடைபெற்றதாக ஒப்புக் கொண்டது. ஆனால் தாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என இம்ரான் கானும் அவரது மனைவியும் மறுத்து வருகின்றனர். 


பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் இம்ரான் தேர்தலில் போட்டியிட தடை, அடுத்தடுத்த வழக்குகளில் தண்டனை என விதிக்கப்பட்டு வருவது தேர்தலில் அவரது கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கான் தற்போது ராவல்பெண்டியில் உள்ள கர்ரிசன் நகர சிலையில் அடைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி புஷ்ரா கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஹில்டாப் மான்சனில் தன்னுடைய தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்

news

நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்

news

திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?

news

பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு

news

ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்