சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 2.90 லட்சம் மணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். இதையடுத்து பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதன் எதிரொலியாக தற்போது மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள், சலுகைகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிப்போர் பெரும்பாலும் சாமானிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இங்கு தரமான கல்வியோடு, மாணவர்களின் அத்தனை தேவைகளும் இலவசமாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதை விட முக்கியமாக முன்பு போல இல்லாமல், பாட போதனைகளும் கூட நவீனமாகியுள்ளன. சிறப்பான ஆங்கில பயிற்சி வகுப்புகள், பல்வேறு திறன் மேம்பாட்டு வகுப்புகள், அதிநவீன வகுப்பறைகள், சிறந்த ஆசிரியர்கள் என தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாறி அசத்திக் கொண்டுள்ளன அரசுப் பள்ளிகள். இதன் காரணமாக பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் அசத்துகின்றனர். சாதனை படைக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே சுமார் 3,27,940 பேர் சேர்ந்துள்ளதாக பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் போது 4 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}