சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 2.90 லட்சம் மணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். இதையடுத்து பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதன் எதிரொலியாக தற்போது மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள், சலுகைகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிப்போர் பெரும்பாலும் சாமானிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இங்கு தரமான கல்வியோடு, மாணவர்களின் அத்தனை தேவைகளும் இலவசமாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதை விட முக்கியமாக முன்பு போல இல்லாமல், பாட போதனைகளும் கூட நவீனமாகியுள்ளன. சிறப்பான ஆங்கில பயிற்சி வகுப்புகள், பல்வேறு திறன் மேம்பாட்டு வகுப்புகள், அதிநவீன வகுப்பறைகள், சிறந்த ஆசிரியர்கள் என தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாறி அசத்திக் கொண்டுள்ளன அரசுப் பள்ளிகள். இதன் காரணமாக பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் அசத்துகின்றனர். சாதனை படைக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே சுமார் 3,27,940 பேர் சேர்ந்துள்ளதாக பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் போது 4 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}