- சீர்காழி சிவ.ஆ. மலர்விழி ராஜா
பாஞ்சாலங் கோட்டையிலே பார்போற்ற வாழ்ந்தவனே !
வீரத்தின் விளைநிலமே வீரபாண்டிய கட்டபொம்மனே !
மண்ணை காக்க மக்களுக்காக வாழ்ந்தவனே !
பாரதத்தின் பெருமை
காக்க பிறந்தவனே !
காலத்தை வீரத்தால் கடந்த கட்டபொம்மனே !
வரிகேட்ட வெள்ளையனை வணங்கமறுத்த தீரனே !
வாள்பேச்சின் வீர ஒலி
வான்வரையில் தொட்டவனே !
அஞ்சாத நெஞ்சம் கொண்ட அதிவீரபாண்டியனே !
சங்கிலியால் பிணைத்தாலும் சுதந்திரகாற்றை சுவாசித்தவனே !

தாய்மண்ணின் வீரம் போற்றும்
தலைமகனே !
தாழ்ந்திடாமல் சிங்கமென தன்மானம்
காத்தவனே !
கயத்தாற்றின் காற்றுகூட
கட்டபொம்மன் கதைசொல்லும் !
தூக்குகயறு முன்னே வந்தும் தோல்வியின்றி
நின்றவனே !
சுதந்திரதாகம் ஒன்றே
சுவாசமென சென்றவனே !
வாழ்க நின் புகழ்
அஞ்சாமையே வாழ்வுஎன.....
அச்சத்தை மடமையாக்கி அறவழியில்
வாழ்ந்தவனே !
போற்றுகிறேன் உனது புகழ்வாழ்கவென்று!
அஞ்சாத நெஞ்சமும்
உறுதியான தீரமும் கொண்டவனே !
கடலலைப்போல உனது வீரம் போற்றிடுவோம் !
வெல்க வீரம் !
வாழ்க பாரதம் !
வளர்க செந்தமிழ் !
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
{{comments.comment}}