விசாகப்பட்டனம்: 2வது டெஸ்ட் போட்டியில், ஜஸ்ப்ரீத் பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலா முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில் விசாகப்பட்டனத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 209 ரன்கலைக் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 253 ரன்களுக்கே சுருண்டு போய் விட்டது. இந்தியாவின் பும்ரா 6 விக்கெட்களை அள்ள, குல்தீப் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

இந்தியா தனது 2வது இன்னிங்ஸை, 225 ரன்களில் இழக்க, பெரிய வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தனது சேசிங்கைத் தொடங்கியது. ஆனால் இந்த முறையும் பும்ரா ரூபத்தில் புயல் வீசவே இங்கிலாந்து தடுமாறிப் போய் விட்டது. கூடவே அஸ்வின் சுழலும் இன்னொரு பக்கம் தாக்க முற்றிலும் தகர்ந்து போய் 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றுப் போனது.
பும்ரா 3 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்களை அள்ளி எடுத்தார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சில் அதிரடி காட்ட, அஸ்வின் மறுபக்கம் சுழற்பந்து வீச்சில் புயலைக் கிளப்பு பிரமாதமான மேட்ச்சாக இது அமைந்து விட்டது. இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா. இரு அணிகளும் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}