விசாகப்பட்டனம்: 2வது டெஸ்ட் போட்டியில், ஜஸ்ப்ரீத் பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலா முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில் விசாகப்பட்டனத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 209 ரன்கலைக் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 253 ரன்களுக்கே சுருண்டு போய் விட்டது. இந்தியாவின் பும்ரா 6 விக்கெட்களை அள்ள, குல்தீப் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

இந்தியா தனது 2வது இன்னிங்ஸை, 225 ரன்களில் இழக்க, பெரிய வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தனது சேசிங்கைத் தொடங்கியது. ஆனால் இந்த முறையும் பும்ரா ரூபத்தில் புயல் வீசவே இங்கிலாந்து தடுமாறிப் போய் விட்டது. கூடவே அஸ்வின் சுழலும் இன்னொரு பக்கம் தாக்க முற்றிலும் தகர்ந்து போய் 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றுப் போனது.
பும்ரா 3 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்களை அள்ளி எடுத்தார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சில் அதிரடி காட்ட, அஸ்வின் மறுபக்கம் சுழற்பந்து வீச்சில் புயலைக் கிளப்பு பிரமாதமான மேட்ச்சாக இது அமைந்து விட்டது. இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா. இரு அணிகளும் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
நிறைகுடம்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
கடலுக்குள் சென்று பார்க்க ஆர்வமா?
அழகோவியம்!
மூச்சடக்கும் கப்பல்.. அப்படீன்னா என்ன தெரியுமா!
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
{{comments.comment}}