2nd Test: புயலாக மாறி தாக்கிய பும்ரா.. விசாகப்பட்டனத்தில் வீழ்ந்த இங்கிலாந்து.. இந்தியாவுக்கு வெற்றி

Feb 05, 2024,03:11 PM IST

விசாகப்பட்டனம்: 2வது டெஸ்ட் போட்டியில், ஜஸ்ப்ரீத் பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.


இந்தியா - இங்கிலாந்து இடையிலா முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில் விசாகப்பட்டனத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடந்தது.


இதில் முதலில் பேட் செய்த இந்தியா 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 209 ரன்கலைக் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 253 ரன்களுக்கே சுருண்டு போய் விட்டது. இந்தியாவின் பும்ரா 6 விக்கெட்களை அள்ள, குல்தீப் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.




இந்தியா தனது 2வது இன்னிங்ஸை,  225 ரன்களில் இழக்க, பெரிய வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தனது சேசிங்கைத் தொடங்கியது. ஆனால் இந்த முறையும் பும்ரா ரூபத்தில் புயல் வீசவே இங்கிலாந்து தடுமாறிப் போய் விட்டது.  கூடவே அஸ்வின் சுழலும் இன்னொரு பக்கம் தாக்க முற்றிலும் தகர்ந்து போய் 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றுப் போனது. 


பும்ரா 3 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்களை அள்ளி எடுத்தார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.


பும்ரா ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சில் அதிரடி காட்ட, அஸ்வின் மறுபக்கம் சுழற்பந்து வீச்சில் புயலைக் கிளப்பு பிரமாதமான மேட்ச்சாக இது அமைந்து விட்டது.  இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா. இரு அணிகளும் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்