தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

Mar 13, 2026,05:12 PM IST

டில்லி : இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அளித்துள்ளனர். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவருக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.


காரணம் என்ன? 


திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் (Special Intensive Revision - SIR) முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஞானேஷ் குமார், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார் என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாகும்.


பதவி நீக்க நடைமுறை :




இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324(5)-ன் படி, தலைமைத் தேர்தல் ஆணையரை அவ்வளவு எளிதாகப் பதவியிலிருந்து நீக்கிவிட முடியாது. உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதே நடைமுறைதான் இவருக்கும் பொருந்தும். 


நோட்டீஸ் அளித்தல்: லோக்சபாவில் குறைந்தது 100 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 50 எம்.பி.க்களும் கையெழுத்திட்டு இந்த நோட்டீஸை சபாநாயகர் அல்லது தலைவரிடம் வழங்க வேண்டும். தற்போது 190-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிகிறது.


குழு விசாரணை: நோட்டீஸ் ஏற்கப்பட்டால், ஒரு மூவர் குழு அமைக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்.


நாடாளுமன்ற வாக்கெடுப்பு: இந்தக் குழு குற்றச்சாட்டை உறுதி செய்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘சிறப்புப் பெரும்பான்மை’ (Special Majority) மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது, அவைக்கு வந்தவர்களில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.


குடியரசுத் தலைவர் உத்தரவு: இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேறிய பிறகு, குடியரசுத் தலைவர் இறுதி உத்தரவைப் பிறப்பிப்பார்.


அரசியல் பின்னணி:


மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் ஆணையர் மீதான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஆளும் பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவது கடினம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்