"இந்தியா"வைக் காணோம்.. பிரதமர் நரேந்திர மோடி முன்பு பளிச்சிட்ட "பாரத்"

Sep 09, 2023,12:53 PM IST
டெல்லி: ஜி-20 மாநாட்டு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இருக்கைக்கு முன்பு இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்ற பெயர் இடம் பெற்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதன்முறையாக ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இது நம் நாட்டிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவமாகும்.  உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. 



ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க அர்ஜென்டினா, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 29 உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

இன்று காலை ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பாரத் மண்டபம் வந்தனர். அவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி வரவேற்றார். அனைவரின் வருகையை தொடர்ந்து மாநாடு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பிரதமர் முன்பு இருந்த பெயர்ப் பலகை அனைவரையும் கவர்ந்தது. ஒவ்வொரு தலைவருக்கு முன்பும் அவர்கள் சார்ந்த நாட்டின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. 

பிரதமர் மோடி முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் பாரத் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது. வழக்கமாக இந்தியா என்றுதான் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் முதல் முறையாக பாரத் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது.  சமீப காலமாக மத்திய அரசு நாட்டின் பெயரை பாரத் என்றே பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்