புனே: இந்தியாவில் கடந்த 12 வருடமாக எந்த டெஸ்ட் தொடரையும் இழக்காமல் இருந்து வந்த இந்தியா, அந்த சாதனையை இன்று இழந்து விட்டது. நியூசிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த எந்த டெஸ்ட் தொடரிலும் இந்தியா தோற்றதில்லை. ஆனால் தற்போது நியூசிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா மிக மோசமான தோல்வியைத் தழுவியிருந்தது. இந்த நிலையில் புனேவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வியுற்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
நியூசிலாந்து பந்து வீச்சாளர் மிட்சல் சான்ட்னரின் அனல் பறக்கும் பந்து வீச்சு காரணமாக, அந்த அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முன்னதாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இதையடுத்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அதிரடி காட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் 156 ரன்களில் சுருண்டு ஷாக் கொடுத்தது. மிட்சல் சான்ட்னர் 7 விக்கெட்களையும், கிளன் பிலிப்ஸ் 2 விக்கெட்களையும், டிம் செளதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்கள், ஜடேஜா 3, அஸ்வின் 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியாவுக்கு மிட்சல் சான்ட்னர் எமனாக வந்த சேர்ந்தார். அதிரடியாக பந்து வீசிய அவர் 6 விக்கெட்களைச் சாய்த்தார். அஜாஸ் படேல் 2 விக்கெட்களை சாய்க்க, பிலிப்ஸுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. இறுதியில், 245 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது இந்தியா.
இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா போராடி 42 ரன்களைக் குவித்தார். சுப்மன் கில் 23, விராட் கோலி 17, வாஷிங்டன் சுந்தர் 21, அஸ்வின் 18 ரன்கள் எடுத்தனர். ரிஷப் பந்த் டக் அவுட் ஆனார். ரோஹித் சர்மா 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}