டெல்லி: இஸ்ரேலில் நடந்து வரும் போரில் சிக்கிய இந்தியர்கள் 212 பேர் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு விமானம் மூலம் டெல்லி வந்தனர். இதில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நெடுங்காலமாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனியர்களிடம் இருந்த காசா பகுதியை, ஹமாஸ் அமைப்பு 2007ம் ஆண்டு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே அவ்வப்போது மோதல் நடந்தபடியே இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு இடையிலான போர் முழு அளவை எட்டியுள்ளது. ஹமாஸ் நடத்திய எதிர்பாரா தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது ஹமாஸை உண்டு இல்லை என்று செய்து வருகிறது. 7 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு களம் இறங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் தனி விமானம் மூலமாக டெல்லி வந்துள்ளனர். டெல்லி வந்த அவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். மீதம் உள்ள இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
இன்று வந்த 212 பேரில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில். அவர்களில் 7 பேர் டெல்லியிலிருந்து கோவை சென்றனர். மற்றவர்கள் சென்னை வந்த சேர்ந்தனர். அவர்களை விமான நிலையத்தில் மாநில அமைச்சர் மா.சுப்ரமணியம் வரவேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலஸ்தீனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் சிக்கவில்லை என்று தெரிவித்தார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}