Operation Ajay: இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்கள் 212 பேர்.. டெல்லி வந்தனர்!

Oct 13, 2023,06:42 PM IST

டெல்லி: இஸ்ரேலில் நடந்து வரும் போரில் சிக்கிய இந்தியர்கள் 212  பேர் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு விமானம் மூலம்  டெல்லி வந்தனர். இதில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நெடுங்காலமாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனியர்களிடம் இருந்த காசா பகுதியை, ஹமாஸ் அமைப்பு 2007ம் ஆண்டு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே அவ்வப்போது மோதல் நடந்தபடியே இருக்கிறது.




இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு இடையிலான போர் முழு அளவை எட்டியுள்ளது. ஹமாஸ் நடத்திய எதிர்பாரா தாக்குதலால்  நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது ஹமாஸை உண்டு இல்லை என்று செய்து வருகிறது. 7 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு களம் இறங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் தனி விமானம் மூலமாக டெல்லி வந்துள்ளனர். டெல்லி வந்த அவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். மீதம் உள்ள இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.


இன்று வந்த 212 பேரில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில். அவர்களில் 7 பேர் டெல்லியிலிருந்து கோவை சென்றனர்.  மற்றவர்கள் சென்னை வந்த சேர்ந்தனர். அவர்களை விமான நிலையத்தில் மாநில அமைச்சர் மா.சுப்ரமணியம் வரவேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலஸ்தீனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் சிக்கவில்லை என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்