Operation Ajay: இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்கள் 212 பேர்.. டெல்லி வந்தனர்!

Oct 13, 2023,06:42 PM IST

டெல்லி: இஸ்ரேலில் நடந்து வரும் போரில் சிக்கிய இந்தியர்கள் 212  பேர் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு விமானம் மூலம்  டெல்லி வந்தனர். இதில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நெடுங்காலமாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனியர்களிடம் இருந்த காசா பகுதியை, ஹமாஸ் அமைப்பு 2007ம் ஆண்டு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே அவ்வப்போது மோதல் நடந்தபடியே இருக்கிறது.




இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு இடையிலான போர் முழு அளவை எட்டியுள்ளது. ஹமாஸ் நடத்திய எதிர்பாரா தாக்குதலால்  நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது ஹமாஸை உண்டு இல்லை என்று செய்து வருகிறது. 7 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு களம் இறங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் தனி விமானம் மூலமாக டெல்லி வந்துள்ளனர். டெல்லி வந்த அவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். மீதம் உள்ள இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.


இன்று வந்த 212 பேரில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில். அவர்களில் 7 பேர் டெல்லியிலிருந்து கோவை சென்றனர்.  மற்றவர்கள் சென்னை வந்த சேர்ந்தனர். அவர்களை விமான நிலையத்தில் மாநில அமைச்சர் மா.சுப்ரமணியம் வரவேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலஸ்தீனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் சிக்கவில்லை என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்