2038ல் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. எர்னஸ்ட் அன்ட் யங் தகவல்

Aug 28, 2025,06:24 PM IST

புது தில்லி: இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் 20.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். மேலும் 2038 ஆம் ஆண்டுக்குள் 34.2 டிரில்லியன் டாலரை எட்டி, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாற வாய்ப்புள்ளது என்று எர்னஸ்ட் அன்ட் யங் நிறுன அறிக்கை கூறுகிறது. 


அமெரிக்காவின் அதிகப்படியான வரிகளால் ஏற்படும் பாதிப்பை, சரியான நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் உண்மையான GDP வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு 0.1% மட்டுமே இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


EY-ன் ஆகஸ்ட் 2025 பொருளாதார கண்காணிப்பு அறிக்கையின்படி, இந்தியா உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் மிகவும் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு காரணம், அதிக சேமிப்பு மற்றும் முதலீட்டு விகிதங்கள், சாதகமான மக்கள் தொகை மற்றும் நிலையான நிதி நிலைமை ஆகியவை ஆகும். இந்தியாவின் இந்த வளர்ச்சி 2047-க்குள் "விக்ஸித் பாரத்" என்ற இலக்கை அடைய உதவும்.




சீனா 2030 ஆம் ஆண்டுக்குள் 42.2 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் முதலிடத்தில் இருந்தாலும், வயதான மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் கடன் ஆகியவை சவாலாக உள்ளன. அமெரிக்கா வலுவாக இருந்தாலும், GDP-யில் 120% அதிகமான கடன் மற்றும் குறைந்த வளர்ச்சி விகிதங்களை எதிர்கொள்கிறது. ஜெர்மனி மற்றும் ஜப்பான் வளர்ந்த நாடுகளாக இருந்தாலும், அதிக வயதுடைய மக்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தை அதிகம் சார்ந்திருப்பது போன்ற தடைகளை கொண்டுள்ளன என்று EY அறிக்கை கூறியுள்ளது.


உலகளாவிய பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் உள்நாட்டு தேவை மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் அதிகரித்து வரும் வலிமை காரணமாக தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரங்களை ஒப்பிடுவதற்கு, சந்தை மாற்று விகிதங்களை விட வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையிலான ஒப்பீடு மிகவும் பொருத்தமானது என்று அறிக்கை கூறுகிறது. 


இந்த அளவீட்டின்படி, சர்வதேச நிதியம், 2025ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபியை 14.2 டிரில்லியன் டாலர் ஆக மதிப்பிட்டுள்ளது. இது சந்தை மாற்று விகிதத்தில் உள்ள அளவை விட 3.6 மடங்கு பெரியது. இதன் மூலம், இந்தியா ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.


2030-க்கு பிறகும், இந்தியா மற்றும் அமெரிக்கா முறையே 6.5% மற்றும் 2.1% என்ற சராசரி வளர்ச்சி விகிதத்தை (IMF கணிப்புகளின்படி) பராமரித்தால், இந்தியா 2038-க்குள் PPP அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்தை விட முன்னேறும் என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பலமே இளைஞர்கள்தான். கூடுதலாக, அதிகரித்து வரும் உள்நாட்டு தேவை மற்றும் நிலையான நிதி கண்ணோட்டம் ஆகியவற்றையும் இந்தியா கொண்டுள்ளது. இது நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Moconaa Falls.. எங்கடா இங்க இருந்த நீர்வீழ்ச்சியைக் காணோம்.. ஆற்றில் மறையும் அதிசயம்!!

news

கண்ணா.. கண்ணா.. உன் இதழும் இனியது.. முகமும் இனியது..!

news

எங்கே என் சொந்தம்?

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!

news

அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!

news

மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்