டெல்லி: டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தியா தனது சுற்றுப் போட்டிகளை முழுக்க முழுக்க அமெரிக்காவில் விளையாடவுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தானுடனான போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.
இந்தியா மொத்தம் நான்கு சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கும். இதில் முதல் போட்டி ஜூன் 5ம் தேதி நடைபெறும். அப்போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா சந்திக்கவுள்ளது. ஜூன் 9ம் தேதி பாகிஸ்தான், ஜூன் 12 அமெரிக்கா மற்றும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் போட்டியில் கனடாவைச் சந்திக்கவுள்ளது இந்தியா.
29 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. கரீபிய தீவுகளில் அதாவது மேற்கு இந்தியத் தீவுகளில் 6 இடங்களிலும், அமெரிக்காவில் 3 இடங்களிலும் போட்டிகள் நடைபெறும். ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
அமெரிக்காவில் நியூயார்க், டல்லாஸ், லாடர்ஹில் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும். மேற்கு இந்தியத் தீவுகளின் ஆறு மைதானங்களில் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. அரை இறுதிப் போட்டி டிரினிடாட் டொபோகா மற்றும் கயானாவில் நடைபெறும். இறுதிப் போட்டி பார்படாஸில் ஜூன் 29ம் தேதி நடைபெறும்.
ஜூன் 1ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் அமெரிக்காவும், கனடாவும் மோதவுள்ளன. ஜூன் 2ம் தேதி நடைபெறும் 2வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், பாபுவா நியூ கினியாவும் மோதும்.
மொத்தம் நான்கு குரூப்களாக 20 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம் பெறும். அதில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்குத் தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அணிகள் மற்றும் பிரிவுகள் விவரம்:
ஏ பிரிவு - இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா.
பி பிரிவு - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்.
சி பிரிவு - நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா, மேற்கு இந்தியத் தீவுகள்
டி பிரிவு - தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}