காத்திருக்கிறது.. ஆசியாவிலேயே மிகப் பெரிய சம்பள  உயர்வு.. யாருக்கு தெரியுமா?

Jan 18, 2023,09:22 AM IST
மும்பை: ஆசியாவிலேயே மிகப் பெரிய  சம்பள உயர்வினை இந்த ஆண்டு இந்தியப் பணியாளர்கள் பெறுவார்கள் என்று கோர்ன் பெர்ரி சர்வே கூறியுள்ளது.



கடந்த ஆண்டு 9.4 சதவீத அளவிலான ஊதிய உயர்வை இந்தியர்கள் பெற்றார்கள். இந்த ஆண்டு அது 30 சதவீத அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ன் பெர்ரி என்பது கன்சல்டிங் நிறுவனமாகும்.  இந்த ஆண்டு ஹைடெக் தொழில் நிறுவனங்கள்,  லைப் சயின்ஸ், ஹெல்த்கேர் நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வரிசையில் உலக அளவில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு கோடிக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர்.  இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் கூட வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 8 லட்சம் பேர் பணியாற்றக் கூடிய 818 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை கோர்ன் பெர்ரி வெளியிட்டுள்ளது. இதில் 61 சதவீத நிறுவனங்கள், முக்கியமான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனவாம்.

இந்தியாவில் இந்த ஆண்டு 9.8 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்குமாம். அதேசமயம், சீனாவில் 5.5, ஆஸ்திரேலியாவில் 3.5, ஹாங்காங்கில் 3.6, இந்தோனேசியாவில் 7, கொரியாவில் 4.5, மலேசியாவில் 5, நியூசிலாந்தில் 3.8 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்குமாம் பிலிப்பைன்ஸில் 5.5, சிங்கப்பூரில் 4, தாய்லாந்தில் 5, வியட்நாமில் 8 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்குமாம்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்