சந்திரனை மட்டுமல்ல.. சூரியனையும் தொடப் போறோம்.. தமிழிசை பெருமிதம்

Aug 31, 2023,08:44 AM IST
ஹைதராபாத்: நாம் சந்திரனை மட்டுமல்ல.. சூரியனையும் கூட தொடப் போகிறோம். வரும் காலத்தில் சந்திரனிலும் கூட நாம் ரக்ஷா பந்தன் கொண்டாட முடியும் என்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் ரக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. அதில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலவை மட்டுமல்ல, நாம் சூரியனையும் கூட அடையப் போகிறோம்.  நிலவிலும் கூட போய் நாம் ரக்ஷா பந்தனை எதிர்காலத்தில் கொண்டாடுவோம்.  நமது பாரதத் தாயின் புதல்வர்கள் குறித்து நாம் பெருமைப்படுகிறோம்.  இன்று நாம் இங்கு இந்த பூமியில் ரக்ஷா பந்தனைக் கொண்டாடுகிறோம். நாளை நிலவிலும் இதைக் கொண்டாடுவோம்.



\நமது விண்வெளி விஞ்ஞானிகளால் நாடு பெருமை அடைந்துள்ளது. நாம் பெருமை அடைந்துள்ளோம்.  இந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பிரதமருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நமது விஞ்ஞானிகள் மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நமது நாட்டில் பல மாநிலங்கள் உள்ளன,  பல மொழிகள் உள்ளன. பழக்க வழக்கங்கள் பல உள்ளன. கலாச்சார வேறுபாடு உள்ளது. இப்படிப்பட்ட நாட்டில்நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பது பெருமையானது.  அதுதான் ரக்ஷா பந்தன் விழாவின் முக்கிய அம்சமாகும் என்றார் தமிழிசை

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்