சந்திரனை மட்டுமல்ல.. சூரியனையும் தொடப் போறோம்.. தமிழிசை பெருமிதம்

Aug 31, 2023,08:44 AM IST
ஹைதராபாத்: நாம் சந்திரனை மட்டுமல்ல.. சூரியனையும் கூட தொடப் போகிறோம். வரும் காலத்தில் சந்திரனிலும் கூட நாம் ரக்ஷா பந்தன் கொண்டாட முடியும் என்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் ரக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. அதில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலவை மட்டுமல்ல, நாம் சூரியனையும் கூட அடையப் போகிறோம்.  நிலவிலும் கூட போய் நாம் ரக்ஷா பந்தனை எதிர்காலத்தில் கொண்டாடுவோம்.  நமது பாரதத் தாயின் புதல்வர்கள் குறித்து நாம் பெருமைப்படுகிறோம்.  இன்று நாம் இங்கு இந்த பூமியில் ரக்ஷா பந்தனைக் கொண்டாடுகிறோம். நாளை நிலவிலும் இதைக் கொண்டாடுவோம்.



\நமது விண்வெளி விஞ்ஞானிகளால் நாடு பெருமை அடைந்துள்ளது. நாம் பெருமை அடைந்துள்ளோம்.  இந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பிரதமருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நமது விஞ்ஞானிகள் மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நமது நாட்டில் பல மாநிலங்கள் உள்ளன,  பல மொழிகள் உள்ளன. பழக்க வழக்கங்கள் பல உள்ளன. கலாச்சார வேறுபாடு உள்ளது. இப்படிப்பட்ட நாட்டில்நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பது பெருமையானது.  அதுதான் ரக்ஷா பந்தன் விழாவின் முக்கிய அம்சமாகும் என்றார் தமிழிசை

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்