கப்போடு வந்தாச்சு பிகிலேய்ய்ய்ய்... டெல்லி திரும்பிய இந்திய அணி.. கேக் வெட்டி செம உற்சாகம்!

Jul 04, 2024,10:38 AM IST

டெல்லி:   T20 உலக உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து தாயகம் திரும்பியது. டெல்லி வந்த இந்திய அணிக்கு மிக மிக உற்சாகமான வரவேற்பு அளித்தது.


டெல்லி திரும்பிய இந்திய அணியினர் தாங்கள் தங்கும் ஹோட்டல் மவுரியாவுக்குச் சென்றனர். அங்கு கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் கேக் வெட்டி இந்திய வீரர்கள் கோப்பை மகிழ்ச்சியை தாயகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். இதனை தொடர்ந்து மாலை மும்பைக்கு செல்ல இருக்கின்றனர். அங்கு பிசிசிஐ சார்பில் வாங்கடே மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.




t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டியில், கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. கடந்த சனிக்கிழமை போட்டிகள் முடிந்தது மேற்கிந்திய தீவுகளில் இருந்து இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. 


இந்த நிலையில்தான் அங்கு பெரில் சூறாவளி தாக்கியது. இதனால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்ப மூன்று நாட்கள் தாமதமானது. சூறாவளி ஒரு வழியாக ஓய்ந்த நிலையில், பிசிசிஐ  சார்பாக சிறப்பு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அவர்களது குடும்பத்தினருடன் நேற்று மதியம் பார்படாஸ் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். 


விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் திரளான ரசிகர்கள் ஆரவாரத்துடன் வீரர்களை வரவேற்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்