உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!

Nov 04, 2025,05:54 PM IST

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.


மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில்  நடந்தது. இதில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது, தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.


50 ஆண்டுகளுக்கு பின்னர் மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.51 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்தது. அதுமட்டுமின்றி சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.5 கோடி வழங்கப்பட்டது.




இந்த போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தீப்தி சர்மா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 212 ரன்கள் குவித்ததுடன், 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தீப்தி சர்மா, தொடர் நாயகி விருதையும் வென்றார்.

 

இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் "திறமைமிகு வீரர்" திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவுக்குக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை வழங்கி சிறப்பிக்க போவதாக அம்மநில காவல்துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி.. மதுரைக் காஞ்சி கூறும் மதுரையின் சிறப்புகள்!

news

எழுத்தாளர் மனைவி!

news

உன்னைப் பார்க்காத நாள்களில் நான் என்னை இழந்தேன்!

news

Tamil Poem: பனித்துளி!

news

500 ஆண்டு பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்.. அருள் தந்து காக்கும் அன்னை!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்