மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது, தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
50 ஆண்டுகளுக்கு பின்னர் மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.51 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்தது. அதுமட்டுமின்றி சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.5 கோடி வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தீப்தி சர்மா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 212 ரன்கள் குவித்ததுடன், 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தீப்தி சர்மா, தொடர் நாயகி விருதையும் வென்றார்.
இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் "திறமைமிகு வீரர்" திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவுக்குக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை வழங்கி சிறப்பிக்க போவதாக அம்மநில காவல்துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}