மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது, தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
50 ஆண்டுகளுக்கு பின்னர் மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.51 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்தது. அதுமட்டுமின்றி சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.5 கோடி வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தீப்தி சர்மா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 212 ரன்கள் குவித்ததுடன், 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தீப்தி சர்மா, தொடர் நாயகி விருதையும் வென்றார்.
இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் "திறமைமிகு வீரர்" திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவுக்குக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை வழங்கி சிறப்பிக்க போவதாக அம்மநில காவல்துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 2026 : சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்...3 நாட்கள் மட்டுமே அவகாசம்
மீரா... டைரியை முழுசா படிச்சியா?.. (நீ மழை - 8)
Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!
DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி
C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!
234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!
Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
{{comments.comment}}