சென்னை: ஆஸ்திரேலியாவை எப்படி வச்ச செய்யப் போகிறது என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதப் போகின்றன. இதை கிட்டத்தட்ட ஒரு போர் போலவே தீவிர இந்திய ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதுவே பாகிஸ்தானாக இருந்திருந்தால் இது போர்தான் என்றே டிக்ளேர் செய்திருப்பார்கள்.. ஆனால் ஆஸ்திரேலியாவை வெல்வதையும் கூட இந்தியர்கள் எப்போதுமே கெத்தாகத்தான் பார்ப்பார்கள்.
காரணம், பாகிஸ்தான் நமக்கு பரம்பரை எதிரி என்றால், ஆஸ்திரேலியா நமக்கு இனவெறி எதிரி. ஆஸ்திரேலியர்கள், எதிரணியினரை எப்படியெல்லாம் கேலி கிண்டல் செய்வார்கள் என்பது உலகம் அறிந்தது. அதிலும் நடப்பு உலக்க கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திப்பது மிக நீண்ட காலத்துக்குப் பிறகு வந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை வெல்வதை ரொம்ப ஸ்பெஷலாக இந்தியா பார்க்கிறது. அதற்கு ஒரு காரணம் உள்ளது.

2006ம் ஆண்டு இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றது. அப்போது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது. அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் சரத் பவார். ஆஸ்திரேலியா கேப்டனாக இருந்தவர் சரத் பவார்.
வெற்றிக் கோப்பையை சரத் பவார் வழங்கினார். சரத் பவார் கோப்பையை வழங்கும்போது அவரை ஆஸ்திரேலிய அணியினர் அவமதித்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது. கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சரத் பவார் நின்றிருந்தபோது, அவரது முதுகில் தட்டி, அவரை நோக்கி விரலைச் சுண்டி கோப்பையைத் தருமாறு முதலில் ரிக்கி பான்டிங் கூறினார். இது சரத் பவாரை அதிர்ச்சி அடைய வைத்தது. அத்தோடு நிற்கவில்லை, பிற வீரர்கள், சரத் பவார் முதுகில் வைத்து வெளியே போங்கள் என்று தள்ளினர். இதுவும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர் இந்திய ரசிகர்கள். ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இதுதான் சரியான வாய்ப்பு. இப்படி ஒரு அவமதிப்பு மீண்டும் இந்தியாவுக்கு நேராமல் தடுக்க ஆஸ்திரேலியாவை படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று பலரும் ஆவேசமாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை பாகிஸ்தானை வீழ்த்தினால் அதைத் திருவிழா போல கொண்டாடுவார்கள். அதே உணர்வைத்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்போதும் இந்தியர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நாளைய இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எப்படி வச்சு செய்யப் போகிறது என்பதை காண இப்போதே ஆவலுடன் தயாராகி விட்டார்கள் ரசிகர்கள்.
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
{{comments.comment}}