சென்னை: ஆஸ்திரேலியாவை எப்படி வச்ச செய்யப் போகிறது என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதப் போகின்றன. இதை கிட்டத்தட்ட ஒரு போர் போலவே தீவிர இந்திய ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதுவே பாகிஸ்தானாக இருந்திருந்தால் இது போர்தான் என்றே டிக்ளேர் செய்திருப்பார்கள்.. ஆனால் ஆஸ்திரேலியாவை வெல்வதையும் கூட இந்தியர்கள் எப்போதுமே கெத்தாகத்தான் பார்ப்பார்கள்.
காரணம், பாகிஸ்தான் நமக்கு பரம்பரை எதிரி என்றால், ஆஸ்திரேலியா நமக்கு இனவெறி எதிரி. ஆஸ்திரேலியர்கள், எதிரணியினரை எப்படியெல்லாம் கேலி கிண்டல் செய்வார்கள் என்பது உலகம் அறிந்தது. அதிலும் நடப்பு உலக்க கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திப்பது மிக நீண்ட காலத்துக்குப் பிறகு வந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை வெல்வதை ரொம்ப ஸ்பெஷலாக இந்தியா பார்க்கிறது. அதற்கு ஒரு காரணம் உள்ளது.
2006ம் ஆண்டு இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றது. அப்போது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது. அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் சரத் பவார். ஆஸ்திரேலியா கேப்டனாக இருந்தவர் சரத் பவார்.
வெற்றிக் கோப்பையை சரத் பவார் வழங்கினார். சரத் பவார் கோப்பையை வழங்கும்போது அவரை ஆஸ்திரேலிய அணியினர் அவமதித்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது. கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சரத் பவார் நின்றிருந்தபோது, அவரது முதுகில் தட்டி, அவரை நோக்கி விரலைச் சுண்டி கோப்பையைத் தருமாறு முதலில் ரிக்கி பான்டிங் கூறினார். இது சரத் பவாரை அதிர்ச்சி அடைய வைத்தது. அத்தோடு நிற்கவில்லை, பிற வீரர்கள், சரத் பவார் முதுகில் வைத்து வெளியே போங்கள் என்று தள்ளினர். இதுவும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர் இந்திய ரசிகர்கள். ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இதுதான் சரியான வாய்ப்பு. இப்படி ஒரு அவமதிப்பு மீண்டும் இந்தியாவுக்கு நேராமல் தடுக்க ஆஸ்திரேலியாவை படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று பலரும் ஆவேசமாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை பாகிஸ்தானை வீழ்த்தினால் அதைத் திருவிழா போல கொண்டாடுவார்கள். அதே உணர்வைத்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்போதும் இந்தியர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நாளைய இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எப்படி வச்சு செய்யப் போகிறது என்பதை காண இப்போதே ஆவலுடன் தயாராகி விட்டார்கள் ரசிகர்கள்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}