சென்னை: ஆஸ்திரேலியாவை எப்படி வச்ச செய்யப் போகிறது என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதப் போகின்றன. இதை கிட்டத்தட்ட ஒரு போர் போலவே தீவிர இந்திய ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதுவே பாகிஸ்தானாக இருந்திருந்தால் இது போர்தான் என்றே டிக்ளேர் செய்திருப்பார்கள்.. ஆனால் ஆஸ்திரேலியாவை வெல்வதையும் கூட இந்தியர்கள் எப்போதுமே கெத்தாகத்தான் பார்ப்பார்கள்.
காரணம், பாகிஸ்தான் நமக்கு பரம்பரை எதிரி என்றால், ஆஸ்திரேலியா நமக்கு இனவெறி எதிரி. ஆஸ்திரேலியர்கள், எதிரணியினரை எப்படியெல்லாம் கேலி கிண்டல் செய்வார்கள் என்பது உலகம் அறிந்தது. அதிலும் நடப்பு உலக்க கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திப்பது மிக நீண்ட காலத்துக்குப் பிறகு வந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை வெல்வதை ரொம்ப ஸ்பெஷலாக இந்தியா பார்க்கிறது. அதற்கு ஒரு காரணம் உள்ளது.

2006ம் ஆண்டு இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றது. அப்போது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது. அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் சரத் பவார். ஆஸ்திரேலியா கேப்டனாக இருந்தவர் சரத் பவார்.
வெற்றிக் கோப்பையை சரத் பவார் வழங்கினார். சரத் பவார் கோப்பையை வழங்கும்போது அவரை ஆஸ்திரேலிய அணியினர் அவமதித்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது. கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சரத் பவார் நின்றிருந்தபோது, அவரது முதுகில் தட்டி, அவரை நோக்கி விரலைச் சுண்டி கோப்பையைத் தருமாறு முதலில் ரிக்கி பான்டிங் கூறினார். இது சரத் பவாரை அதிர்ச்சி அடைய வைத்தது. அத்தோடு நிற்கவில்லை, பிற வீரர்கள், சரத் பவார் முதுகில் வைத்து வெளியே போங்கள் என்று தள்ளினர். இதுவும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர் இந்திய ரசிகர்கள். ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இதுதான் சரியான வாய்ப்பு. இப்படி ஒரு அவமதிப்பு மீண்டும் இந்தியாவுக்கு நேராமல் தடுக்க ஆஸ்திரேலியாவை படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று பலரும் ஆவேசமாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை பாகிஸ்தானை வீழ்த்தினால் அதைத் திருவிழா போல கொண்டாடுவார்கள். அதே உணர்வைத்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்போதும் இந்தியர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நாளைய இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எப்படி வச்சு செய்யப் போகிறது என்பதை காண இப்போதே ஆவலுடன் தயாராகி விட்டார்கள் ரசிகர்கள்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}