அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!

Jul 12, 2025,05:24 PM IST

டெல்லி: வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்தியத் தம்பதி, தங்களிடம் ரூ. 25 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாகவும், இதை வைத்துக் கொண்டு இந்தியாவில் செட்டிலாக முடியுமா, ஓய்வுக் காலத்தைக் கழிக்க இந்தப் பணம் போதுமா என்று கேட்டிருப்பது விவாதத்தையும் கலகலப்பானை ஆலோசனைகளையும் கிளப்பியுள்ளது.


வெளிநாட்டில் சிறப்பான வாழ்க்கைத் தேடிப் பயணிக்கும் கனவு, எண்ணற்ற இந்தியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால், அங்கு போன இந்தியர்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது தெரியுமா.. எப்படியாவது திரும்ப இந்தியாவுக்கே போய் செட்டிலாகி விட வேண்டும் என்பதுதான். 




இந்த நிலையில், அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஓர் இளம் இந்தியத் தம்பதி, இந்தியா திரும்புவது குறித்து 'ரெடிட்' சமூக வலைத்தளத்தில் ஆலோசனை கேட்டு கலகலப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தத் தம்பதிக்கு வயது 30களில் இருக்கும். ஒரு குழந்தை இருக்கிறதாம். இந்தத் தம்பதி, இந்தியாவில் மூவரும் வசதியான வாழ்வு வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கேட்டுள்ளனர்.


அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையிலும், நாட்டிலும் நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புவது குறித்து தாங்கள் சிந்திப்பதாக அத்தம்பதி பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்குத் திரும்பி ஓய்வுபெற எவ்வளவு பணம் தேவைப்படும்?. நாங்கள் எங்கள் 30களின் நடுப்பகுதியில் இருக்கிறோம். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறோம். இங்கு தொழில்நுட்பத் துறையிலும், நாட்டிலும் நடக்கும் சில காரணங்களால், இந்தியாவுக்குத் திரும்பலாமா என யோசித்து வருகிறோம்.


நாங்கள் சிறிது காலம் ஓய்வெடுத்துக்கொண்டு, பிறகு எங்கள் விருப்பத்திற்கேற்ப வேலை தேடுவோம். ஆனால், அது எங்கள் வாழ்க்கையை முழுமையாக ஆட்கொள்ளக் கூடாது என விரும்புகிறோம். எனவே, இந்தியாவில் முன்கூட்டியே ஓய்வுபெற்று, ஒரு குழந்தையுடன் வசதியான வாழ்க்கையை வாழ எவ்வளவு பணம் தேவைப்படும்? என்று அவர்கள் கேட்டுள்ளனர். மேலும் தங்களிடம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25 கோடி சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.  இந்தத் தம்பதி இந்தியக் குடிமக்களாகவே உள்ளனர். ஆனால் குழந்தை அமெரிக்க குடிமகனாம். 


இவர்களின் பதிவுக்கு பலரும் சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்து வருகின்றனர். ஆலோசனைகளும் குவிந்து கொண்டுள்ளனவாம்.


அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் இந்தியா திரும்புவது குறித்த விவாதம் அதிகரித்து வரும் நிலையில், இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்