லண்டன்: லண்டனில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேன்ட்ஸ், சான்ட்வெல் பகுதியைச் சேர்ந்தவர் முகான் சிங். 39 வயதாகும் இவர் கடந்த 2021ம் ஆண்டு பிர்மிங்காமிலிருந்து லண்டன் வந்த ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.
இதையடுத்து அந்தப் பெண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் லீமிங்டன் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது போலீஸார் முகான் சிங்கைக் கைது செய்தனர். அவர் மீது பின்னர் வார்விக் கிரவுன் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 வருடங்கள் அவரைக் கண்காணிப்புப் பட்டியலிலும் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}