லண்டன்: லண்டனில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேன்ட்ஸ், சான்ட்வெல் பகுதியைச் சேர்ந்தவர் முகான் சிங். 39 வயதாகும் இவர் கடந்த 2021ம் ஆண்டு பிர்மிங்காமிலிருந்து லண்டன் வந்த ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.

இதையடுத்து அந்தப் பெண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் லீமிங்டன் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது போலீஸார் முகான் சிங்கைக் கைது செய்தனர். அவர் மீது பின்னர் வார்விக் கிரவுன் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 வருடங்கள் அவரைக் கண்காணிப்புப் பட்டியலிலும் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}