ஓடும் ரயிலில்.. இளம் பெண் மீது கை வைத்த இந்தியருக்கு.. 16 வார சிறை!

Oct 17, 2023,09:48 AM IST

லண்டன்: லண்டனில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேன்ட்ஸ், சான்ட்வெல் பகுதியைச் சேர்ந்தவர் முகான் சிங். 39 வயதாகும் இவர் கடந்த 2021ம் ஆண்டு பிர்மிங்காமிலிருந்து லண்டன் வந்த ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.




இதையடுத்து அந்தப் பெண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் லீமிங்டன் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது போலீஸார் முகான் சிங்கைக் கைது செய்தனர். அவர் மீது பின்னர் வார்விக் கிரவுன் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.


கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 வருடங்கள் அவரைக் கண்காணிப்புப் பட்டியலிலும் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்