காபூல்: மாஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் பகுதியில் உள்ள டாப்கானா மலைப் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குளாகியுள்ளதாக தலிபான்கள் அரசு உறுதி செய்துள்ளது.
இந்த விமானம் இந்தியாவிலிருந்து போன விமானம் என்று முதலில் ஆப்கானிஸ்தானிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதை தற்போது இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவீட்டில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளாகியுள்ள விமானம் இந்தியாவின் ஷெட்யூல்ட் விமானமோ அல்லது இந்தியாவிலிருந்து அமர்த்தப்பட்ட வாடகை விமானமோ அல்ல. அது மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானமாகும். மேல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். உயிர்ப்பலி குறித்து இதுவரை தெரியவில்லை. கரன், மஞ்சான், ஜிபக் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இந்த டாப்கானா மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள வாகா என்ற பிராந்தியத்தின் மீது விமானம் பறந்துகொண்டிருந்தபோதுதான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீட்புப் படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்த பிறகுதான் உயிர்ப்பலி உள்ளிட்டவை குறித்துத் தெரிய வரும்.
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய விமானம், வாடகைக்கு அமர்த்தப்பட்ட சார்ட்டர்ட் விமானம் என்று தெரிய வந்துள்ளது. அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விமானத்தில் யார் பயணித்தார்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}