காபூல்: மாஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் பகுதியில் உள்ள டாப்கானா மலைப் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குளாகியுள்ளதாக தலிபான்கள் அரசு உறுதி செய்துள்ளது.
இந்த விமானம் இந்தியாவிலிருந்து போன விமானம் என்று முதலில் ஆப்கானிஸ்தானிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதை தற்போது இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவீட்டில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளாகியுள்ள விமானம் இந்தியாவின் ஷெட்யூல்ட் விமானமோ அல்லது இந்தியாவிலிருந்து அமர்த்தப்பட்ட வாடகை விமானமோ அல்ல. அது மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானமாகும். மேல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். உயிர்ப்பலி குறித்து இதுவரை தெரியவில்லை. கரன், மஞ்சான், ஜிபக் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இந்த டாப்கானா மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள வாகா என்ற பிராந்தியத்தின் மீது விமானம் பறந்துகொண்டிருந்தபோதுதான் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்புப் படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்த பிறகுதான் உயிர்ப்பலி உள்ளிட்டவை குறித்துத் தெரிய வரும்.
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய விமானம், வாடகைக்கு அமர்த்தப்பட்ட சார்ட்டர்ட் விமானம் என்று தெரிய வந்துள்ளது. அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விமானத்தில் யார் பயணித்தார்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}