காபூல்: மாஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் பகுதியில் உள்ள டாப்கானா மலைப் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குளாகியுள்ளதாக தலிபான்கள் அரசு உறுதி செய்துள்ளது.
இந்த விமானம் இந்தியாவிலிருந்து போன விமானம் என்று முதலில் ஆப்கானிஸ்தானிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதை தற்போது இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவீட்டில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளாகியுள்ள விமானம் இந்தியாவின் ஷெட்யூல்ட் விமானமோ அல்லது இந்தியாவிலிருந்து அமர்த்தப்பட்ட வாடகை விமானமோ அல்ல. அது மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானமாகும். மேல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். உயிர்ப்பலி குறித்து இதுவரை தெரியவில்லை. கரன், மஞ்சான், ஜிபக் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இந்த டாப்கானா மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள வாகா என்ற பிராந்தியத்தின் மீது விமானம் பறந்துகொண்டிருந்தபோதுதான் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்புப் படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்த பிறகுதான் உயிர்ப்பலி உள்ளிட்டவை குறித்துத் தெரிய வரும்.
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய விமானம், வாடகைக்கு அமர்த்தப்பட்ட சார்ட்டர்ட் விமானம் என்று தெரிய வந்துள்ளது. அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விமானத்தில் யார் பயணித்தார்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}