மும்பை: சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் வர்த்தக விடுமுறைக்கு பிறகு பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியுள்ள நிலையில் பங்கு வர்த்தகம் இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி துறை பங்குகளின் விலை உயர்வே வர்த்தக உயர்விற்கு முதன்மை காரணமாக இருந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து திட்டங்களைப் பெறுவது மட்டும் அல்லாமல் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியைக் குறைந்தது மூலம் புதிய வர்த்தகம் வருவது அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

ஆசியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையின் முன்னணி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகளுடன் இன்றைய வர்த்தகம் புதிய உயர்வுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 95.95 புள்ளிகள் உயர்ந்து 23,561 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 309 புள்ளிகள் உயர்ந்து 77,302 புள்ளிகளை கடந்தது வர்த்தகம்.
அமெரிக்கப் பங்குச்சந்தையின் சாதனை உயர்வைத் தொடர்ந்து இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் முக்கிய இடத்தை தொட்டு வருகிறது. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகப்படியான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
மறுபக்கம், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் முழு பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவும் பங்குச் சந்தையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}