இதுக்கு ரூ.5000 கோடி செலவு செய்திருக்கிறார்களா?... டாஸ்மாக்கிற்கே டஃப் கொடுக்குறாங்களே!

Aug 02, 2023,09:52 AM IST
டெல்லி : இந்தியர்கள் கடந்த 6 மாதங்களில் கார்கள், ஐபோன்கள் வாங்குவதையும் தாண்டி அழகு சாதனப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை Kantar Worldpanel ன் முதல் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய காஸ்மெடிக் பிரிவில் மட்டும், லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், ஐலைனர் என 100 மில்லியனுக்கும் அதிகமான அழகு சாதன பொருட்களை இந்தியாவில் டாப் 10 நகரங்களில் உள்ள இந்தியர்கள் வாங்கி உள்ளனராம். இவற்றின் மதிப்பு ரூ.5000 கோடியை விட அதிகமாம். இவற்றில் 40 சதவீதம் பொருட்கள் ஆன்லைன் மூலமாக மட்டும் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



வேலைக்கு செல்லும் பெண்களே ஆன்லைன், ஆஃப் லைன் என இரண்டிலும் அதிகமாக வாங்கி உள்ளதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக வாங்கப்பட்ட அழகு சாதன பொருட்களில் பெண்கள் வாங்கியது மட்டும் 1.6 மடங்கு அதிகமாம். ஏற்கனவே  அழகு சாதனை பொருட்களை அதிக வாங்குவதில் ஆசியர்கள் தான் முதலிடத்தில் இருந்து வருகிறார்கள். அதிலும் தென் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் வாங்கி வருகிறார்கள். 

கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் உதட்டிற்கு உபயோகிக்கும் அழகு சாதன பொருட்கள் மட்டும் 38 சதவீதம் விற்பனையாகி உள்ளதாம். இதற்கு அடுத்த படியாக நெயில் பாலிஷ் தான் அதிகம் வாங்கப்பட்டுள்ளது. தற்போது அதிகமான பிராண்டுகள் மார்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளதால் அவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த அழகு சாதன பொருட்கள் விற்பனையிலும் சோஷியல் மீடியாவின் பங்கு அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

புதிய மாடல் கார்கள், பைக்குகள், ஐபோன்கள் ஆகியவற்றின் விற்பனையையும், மதுபான விற்பனையையும் அழகு சாதன பொருட்களின் விற்பனை தூக்கி சாப்பிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்களை அழகுபடுத்திக் கொள்ள பெண்களுக்கு இணையாக ஆண்களும் களமிறங்கி விட்டதும் இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்