சென்னை: 2025ம் ஆண்டு பிறந்து விட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் புது வருடத்தை வெகு உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
2024ம் ஆண்டு பல சோகங்களையும், கஷ்டங்களையும் கொடுத்து விட்டு ஒரு வழியாக விடை பெற்று விட்டது. புதிய ஆண்டுக்காக மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் சரியாக 12 மணிக்கு 2025ம் ஆண்டு பிறந்தது. இந்த வருடம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற வேட்கையுடன் காத்திருக்கும் மக்கள் உற்சாகமாக புது வருடத்தை வரவேற்றுள்ளனர்.
இந்தியா முழுவதும் நகரங்கள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் மக்கள் புது வருடத்தை வரவேற்றனர்.

தமிழ்நாட்டிலும் புது வருடம் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. சென்னையில் மெரீனா, பெசன்ட், திருவான்மியூர் என அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். குடும்பம் குடும்பமாக மக்கள் கடற்கரைகளில் குவிந்து விதம் விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
மால்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹோட்டல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல கோவில்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி மகிழ்ந்தனர். சர்ச்சுகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு மக்கள் புது வருடம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}