சென்னை: 2025ம் ஆண்டு பிறந்து விட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் புது வருடத்தை வெகு உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
2024ம் ஆண்டு பல சோகங்களையும், கஷ்டங்களையும் கொடுத்து விட்டு ஒரு வழியாக விடை பெற்று விட்டது. புதிய ஆண்டுக்காக மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் சரியாக 12 மணிக்கு 2025ம் ஆண்டு பிறந்தது. இந்த வருடம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற வேட்கையுடன் காத்திருக்கும் மக்கள் உற்சாகமாக புது வருடத்தை வரவேற்றுள்ளனர்.
இந்தியா முழுவதும் நகரங்கள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் மக்கள் புது வருடத்தை வரவேற்றனர்.

தமிழ்நாட்டிலும் புது வருடம் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. சென்னையில் மெரீனா, பெசன்ட், திருவான்மியூர் என அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். குடும்பம் குடும்பமாக மக்கள் கடற்கரைகளில் குவிந்து விதம் விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
மால்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹோட்டல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல கோவில்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி மகிழ்ந்தனர். சர்ச்சுகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு மக்கள் புது வருடம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}