Happy New Year 2025.. பிறந்தது 2025.. இந்தியா முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன்.. தெறிக்க விட்ட மக்கள்

Jan 01, 2025,04:18 PM IST

சென்னை: 2025ம் ஆண்டு பிறந்து விட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் புது வருடத்தை வெகு உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


2024ம் ஆண்டு பல சோகங்களையும்,  கஷ்டங்களையும் கொடுத்து விட்டு ஒரு வழியாக விடை பெற்று விட்டது. புதிய ஆண்டுக்காக மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் சரியாக 12 மணிக்கு 2025ம் ஆண்டு  பிறந்தது. இந்த வருடம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற வேட்கையுடன் காத்திருக்கும் மக்கள் உற்சாகமாக புது வருடத்தை வரவேற்றுள்ளனர்.


இந்தியா முழுவதும் நகரங்கள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் மக்கள் புது வருடத்தை வரவேற்றனர்.




தமிழ்நாட்டிலும் புது வருடம் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. சென்னையில் மெரீனா, பெசன்ட், திருவான்மியூர் என அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். குடும்பம் குடும்பமாக மக்கள் கடற்கரைகளில் குவிந்து விதம் விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.


மால்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹோட்டல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


இதேபோல மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல கோவில்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி மகிழ்ந்தனர். சர்ச்சுகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டு மக்கள் புது வருடம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

Mettur Dam: மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

news

சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

news

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பல்லாக்கு கொடுக்கச் சொன்ன சிவபெருமான்!

news

வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்