செங்கல்பட்டு: ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே, பிறந்து 3 மணிநேரமே ஆன பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது.
ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அவ்வழியே சென்ற திருநங்கை ஒருவர் அந்த குழந்தையை பார்த்துள்ளார். உடலில் துணி எதுவும் இல்லாமல் எறும்புகள் சூழ்ந்த நிலையில் குழந்தை கிடந்துள்ளது. பதறிப் போன திருநங்கை குழந்தையை கையில் தூக்கி வைத்துக் கொண்டு, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த திருநங்கை கூறுகையில், இது எல்லாம் நியாயமா, ரோட்டுல வீசி இருக்காங்க. இங்க எல்லாம் ஆடு குட்டி போட்டாலே நாய் தூக்கிட்டு போயிடும். இந்த பச்ச புள்ள என்னங்க பண்ணுச்சு. பாவம் இன்னக்கி காலையில தான் பிறந்திருக்கு. மாவு கூட கழுவல தலை எல்லாம் மாவு. இது எல்லாம் நியாயமே இல்ல. இந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு. பொம்பள புள்ள வேற.. இதுக்கு ஏதாவது நல்லது செய்ங்க என்று கூறி 108 ஆம்புலன்சில் வந்தவரிடம் கொடுத்து அனுப்பினார்.
அந்த குழந்தைககு 108 ஆம்புலன்சில் முதல் உதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்து வந்த அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படி இங்கே குழந்தை வந்தது, யாருடைய குழந்தை என்று பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}