செங்கல்பட்டு: ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே, பிறந்து 3 மணிநேரமே ஆன பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது.
ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அவ்வழியே சென்ற திருநங்கை ஒருவர் அந்த குழந்தையை பார்த்துள்ளார். உடலில் துணி எதுவும் இல்லாமல் எறும்புகள் சூழ்ந்த நிலையில் குழந்தை கிடந்துள்ளது. பதறிப் போன திருநங்கை குழந்தையை கையில் தூக்கி வைத்துக் கொண்டு, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த திருநங்கை கூறுகையில், இது எல்லாம் நியாயமா, ரோட்டுல வீசி இருக்காங்க. இங்க எல்லாம் ஆடு குட்டி போட்டாலே நாய் தூக்கிட்டு போயிடும். இந்த பச்ச புள்ள என்னங்க பண்ணுச்சு. பாவம் இன்னக்கி காலையில தான் பிறந்திருக்கு. மாவு கூட கழுவல தலை எல்லாம் மாவு. இது எல்லாம் நியாயமே இல்ல. இந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு. பொம்பள புள்ள வேற.. இதுக்கு ஏதாவது நல்லது செய்ங்க என்று கூறி 108 ஆம்புலன்சில் வந்தவரிடம் கொடுத்து அனுப்பினார்.
அந்த குழந்தைககு 108 ஆம்புலன்சில் முதல் உதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்து வந்த அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படி இங்கே குழந்தை வந்தது, யாருடைய குழந்தை என்று பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
{{comments.comment}}