செங்கல்பட்டு: ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே, பிறந்து 3 மணிநேரமே ஆன பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது.
ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அவ்வழியே சென்ற திருநங்கை ஒருவர் அந்த குழந்தையை பார்த்துள்ளார். உடலில் துணி எதுவும் இல்லாமல் எறும்புகள் சூழ்ந்த நிலையில் குழந்தை கிடந்துள்ளது. பதறிப் போன திருநங்கை குழந்தையை கையில் தூக்கி வைத்துக் கொண்டு, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த திருநங்கை கூறுகையில், இது எல்லாம் நியாயமா, ரோட்டுல வீசி இருக்காங்க. இங்க எல்லாம் ஆடு குட்டி போட்டாலே நாய் தூக்கிட்டு போயிடும். இந்த பச்ச புள்ள என்னங்க பண்ணுச்சு. பாவம் இன்னக்கி காலையில தான் பிறந்திருக்கு. மாவு கூட கழுவல தலை எல்லாம் மாவு. இது எல்லாம் நியாயமே இல்ல. இந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு. பொம்பள புள்ள வேற.. இதுக்கு ஏதாவது நல்லது செய்ங்க என்று கூறி 108 ஆம்புலன்சில் வந்தவரிடம் கொடுத்து அனுப்பினார்.
அந்த குழந்தைககு 108 ஆம்புலன்சில் முதல் உதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்து வந்த அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படி இங்கே குழந்தை வந்தது, யாருடைய குழந்தை என்று பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}