சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இலக்கியா அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சாப்பிட்டது ஊக்க சத்து மாத்திரை என்று கூறப்படுகிறது. அதிக அளவில் சாப்பிட்டதால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்பு டிக் டாக்கிலும், பின்னர் இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ் போட்டு வந்தவர் இலக்கியா. தனது கவர்ச்சிகரமான ரீல்ஸ்களால் பிரபலமானார். அவரது ரீல்ஸ்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கூட விடாமல் தனது ரீல்ஸ்களால் கலக்கி வந்தார் இலக்கியா. பின்னர் ஒரு கட்டத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்களை விட்டு விட்டு சமையல் வீடியோக்களில் இறங்கினார்.

அவரது சமையல் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமிலும், யூடியூபிலும் பிரபலமாகி வைரலாகின. காட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இலக்கியா இன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறப்பட்டது. காரணம் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் குறித்து வெளியான தகவல். ஆனால் தற்போது அதிக அளவிலான ஊக்க சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலக்கியாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி சாப்பிட்டார் என்பது குறித்து தெரியவில்லை.
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
If someone's willing to be with you at your lowest.. வெற்றியை அவர்களுடன் கொண்டாடு!
If you are looking for a friend faultless.. நண்பர்களே மிச்சம் இருக்க மாட்டார்கள்!
S Sripriya Short Story: நன்றி மறப்பது நன்றன்று!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
கடையே கலகலவென சிரித்தது .. விஷாலின் விளையாட்டுக்கள் (16)
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
கோவிலுக்குத் திரும்பினார் அழகர்.. மதுரை சித்திரை திருவிழா நிறைவு
{{comments.comment}}