சென்னை: 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் சர்வதேச பலூன் நடைபெற உள்ளது. இந்த விழா நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இப்பண்டிகை ஜாதி மத இன பேதமின்றி உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் வகையில் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். உழவர்கள் தங்களின் உழவு தொழிலுக்கு உதவிய இயற்கையான சூரியன் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து, அதனை சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து இந்த விழாவை கொண்டாடுகின்றனர் . அதேபோல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளும் இந்த பண்டிகையில் இடம்பெறுகின்றன.

அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் 15 ஆம் தேதியும், காணும் பொங்கல் 16 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் திங்கட்கிழமை போகி பண்டிகை 13ஆம் தேதி வருகிறது. ஜனவரி 13 முதல் 16 தேதி வரை நான்கு நாட்களோடு,போகி பண்டிகைக்கு முன்பு சனி, ஞாயிறு வார இறுதி நாட்களை சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை நாட்களை கொண்டாட மக்கள் இப்பவே ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்கிடையே 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கேற்றது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பலூன் திருவிழா, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை, கோவை, மதுரை என முக்கிய நகரங்களில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி குறித்து விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}