சர்வதேச மகளிர் தினம் 2025.. மதிப்பும் மரியாதையும் மிக்க மந்திர வார்த்தை.. பெண்!

Mar 05, 2025,02:18 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் நாம் அனைவரும் கொண்டாடவிருக்கிறோம். இல்லைங்களா? வாங்க பிரண்ட்ஸ் மகளிர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.


-  மதிப்பு ,மரியாதைக்கும் உரிய ஒரு வார்த்தை மந்திரம் 'பெண்'.

க-   கண்ணும் கருத்துமாய் குடும்ப பொறுப்பை சுமப்பவள் பெண்.

ளி -  களிப்பூட்டி தன் குடும்ப உறுப்பினர்களை குதூகலப் படுத்துபவளும் பெண்.

ர் -  'ஆணுக்குப் பெண் நிகர் 'இந்த அழகான வாக்கியத்திற்கு பொருத்தமானவள் பெண்.




'சக்தி இல்லையேல் சிவன் இல்லை .சிவன் இல்லையேல் சக்தி இல்லை 'என்ற கூற்று ஆண்டவனுக்கு மட்டுமல்ல மனிதர்களாக இவ்வுலகில் பிறந்த நமக்கும் தான். ஆண் இல்லாமல் பெண்ணில்லை பெண் இல்லாமல் ஆண் இல்லை அந்த ஆணை சுமப்பவளும் பெண்தான்.

 

சூரியன் இல்லையேல் பூமி சுழலாது பெண்கள் இல்லையேல் பூவுலகம் இயங்காது. வாழ்க்கை ஏழு வண்ண வானவில் என்றால் பெண்கள் அதன் உள்ளிருக்கும் ஏழு வண்ணங்கள் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் பெண்ணின் பங்களிப்பு என்பது சொல்லில் அடங்காது. ஒருவர் வீட்டில் குறும்பும் சுட்டித்தனம் நிறைந்த மகளாய் பிறந்து, பெற்றவர்கள் விருப்பத்திற்கும், தன் விருப்பத்திற்கும் ஏற்ப, மற்ற ஒருவருக்கு மனைவியாகிறார். அன்பின் வெளிப்பாடாய் பிள்ளைகள் பெற்று அன்பு தாயாகிறாள். குடும்பத்தை கண்ணும் கருத்துமாக கட்டுக்கோப்பாக பார்த்துக் கொள்வதில் அவளுக்கு நிகர் அவளே.


இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, வேலைக்குச் சென்று ஆணின் பாரத்தை ,குடும்ப பொறுப்பை குறைக்க, அவனுக்கு நிகராக வேலை செய்து சம்பாதிப்பதிலும் அவளுக்கு நிகர் அவளே. வலிமையான ,அன்பான, அழகான ,அறிவான பெண்களாக பிறந்த அனைவரும் பெருமைப்பட வேண்டும்.


மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...!!! அனைவருக்கும் அட்வான்ஸ் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

news

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

news

ராணுவத்திற்கு உதவ தயார்... சண்டிகரில் குவிந்த வரும் இளைஞர்கள்!

news

அறத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது: அண்ணாமலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்