- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் நாம் அனைவரும் கொண்டாடவிருக்கிறோம். இல்லைங்களா? வாங்க பிரண்ட்ஸ் மகளிர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
ம - மதிப்பு ,மரியாதைக்கும் உரிய ஒரு வார்த்தை மந்திரம் 'பெண்'.
க- கண்ணும் கருத்துமாய் குடும்ப பொறுப்பை சுமப்பவள் பெண்.
ளி - களிப்பூட்டி தன் குடும்ப உறுப்பினர்களை குதூகலப் படுத்துபவளும் பெண்.
ர் - 'ஆணுக்குப் பெண் நிகர் 'இந்த அழகான வாக்கியத்திற்கு பொருத்தமானவள் பெண்.

'சக்தி இல்லையேல் சிவன் இல்லை .சிவன் இல்லையேல் சக்தி இல்லை 'என்ற கூற்று ஆண்டவனுக்கு மட்டுமல்ல மனிதர்களாக இவ்வுலகில் பிறந்த நமக்கும் தான். ஆண் இல்லாமல் பெண்ணில்லை பெண் இல்லாமல் ஆண் இல்லை அந்த ஆணை சுமப்பவளும் பெண்தான்.
சூரியன் இல்லையேல் பூமி சுழலாது பெண்கள் இல்லையேல் பூவுலகம் இயங்காது. வாழ்க்கை ஏழு வண்ண வானவில் என்றால் பெண்கள் அதன் உள்ளிருக்கும் ஏழு வண்ணங்கள் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் பெண்ணின் பங்களிப்பு என்பது சொல்லில் அடங்காது. ஒருவர் வீட்டில் குறும்பும் சுட்டித்தனம் நிறைந்த மகளாய் பிறந்து, பெற்றவர்கள் விருப்பத்திற்கும், தன் விருப்பத்திற்கும் ஏற்ப, மற்ற ஒருவருக்கு மனைவியாகிறார். அன்பின் வெளிப்பாடாய் பிள்ளைகள் பெற்று அன்பு தாயாகிறாள். குடும்பத்தை கண்ணும் கருத்துமாக கட்டுக்கோப்பாக பார்த்துக் கொள்வதில் அவளுக்கு நிகர் அவளே.
இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, வேலைக்குச் சென்று ஆணின் பாரத்தை ,குடும்ப பொறுப்பை குறைக்க, அவனுக்கு நிகராக வேலை செய்து சம்பாதிப்பதிலும் அவளுக்கு நிகர் அவளே. வலிமையான ,அன்பான, அழகான ,அறிவான பெண்களாக பிறந்த அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...!!! அனைவருக்கும் அட்வான்ஸ் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}