பெண்களின் பிரம்மாஸ்திரம் எது தெரியுமா?.. "படிப்பு".. எதையும் ஆளலாம்.. சாதிச்சுக் காட்டிய ஸ்ரீபதி!

Mar 08, 2024,10:37 AM IST

சென்னை:  சமுதாயத்தில் வாழும் "உயர்ந்த இன" மக்கள் மட்டும் தான் சாதிக்க வேண்டுமா என்ன.. எந்த வேறுபாடும் இன்றி பழங்குடியின மக்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க முடியும் என்பதை, சமூகத்தின் ஒரு "தட்டு" உருவாக்கி வைத்திருந்த "பல தட்டு பாரம்பரியத்தை" அடித்து உடைத்து தகர்த்து எங்களாலும் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி.


மலை மற்றும் காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் ஒரு காலத்தில் கல்வி அறிவின்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்களுக்கான தனி வாழ்க்கை முறையுடன், உணவு, உடை, இருப்பிடம், மற்றும் பழக்கவழக்கம் போன்றவற்றில் வேறுபட்டு  வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது இந்த நிலைமை மாறிவிட்டது. இவர்களும் படிக்க முடியும், இவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை சமீப காலமாக பலரும் நிரூபிக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக பெண்கள்.. !




பழங்குடியின மக்களும் எல்லா துறைகளிலும் உயர்ந்து விளங்க வேண்டும், சமூக அந்தஸ்தை அடைய வேண்டும், பாரபட்சத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக பழங்குடியின மக்களுக்காக  அரசு பல்வேறு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக பழங்குடியின மக்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அவர்களின் திறமையை நிரூபித்தும் வருகின்றனர்.


அப்படி சமீபத்தில் தன்னை நிரூபித்த பழங்குடியின பெண்தான் ஸ்ரீபதி. அவர்தான் தமிழ்நாட்டில், பழங்குடியின இனத்திலிருந்து உருவான  முதல் பெண் நீதிபதி என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.


யார் இந்த ஸ்ரீபதி..?




திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி. காளி மற்றும் மல்லிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீபதி. இவருக்கு சரண்யா என்ற தங்கையும், ஜெயசூர்யா என்ற தம்பியும் உள்ளனர். இவர் இதே பகுதியில் உள்ள வெங்கட்ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.


காளி, மல்லிகா தம்பதியினரின் நிலங்களை அரசு கையகப்படுத்தியதன் காரணமாக இவர்கள் சொந்த ஊரான ஏலகிரிக்கு சென்று ஹோட்டலில் பணிபுரிந்து உள்ளனர். இதன் பின்னர் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த பணத்தை வைத்து ஸ்ரீபதியை படிக்க வைத்துள்ளனர்.


ஏலகிரியில் உள்ள சார்லஸ் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீபதி பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 5 வருடம் சட்டப் படிப்பை படித்து முடித்தார். படிக்கும்போதே திருமணம் செய்து கொண்ட ஸ்ரீபதி பிரசவித்த மறுநாளே தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்றார். ஒரு பெண்ணுக்கு குழந்தை பிரசவித்தால் அதன் வலி என்னவென்று   வார்த்தைகளால் சொல்ல முடியாது. மனதளவிலும் உடலளவிலும் அதை உணர்ந்தால் மட்டுமே தெரியும். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தனது 23 வயதில் நீதிபதி தேர்வில் வென்றுள்ளார் ஸ்ரீபதி.


எந்த ஒரு அடிப்படை வசதியும்  இல்லாத சூழ்நிலையில் கஷ்டப்பட்டு படித்து சாதித்துள்ளார். ஹோட்டலில் வேலை செய்து படிக்க வைத்த தனது தாய் தந்தையருக்கு ஸ்ரீபதி மிக பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளார். 

இதைவிட ஒரு தாய் தந்தையருக்கு என்ன கௌரவம் கிடைத்துவிட முடியும். 


திருமணமானால் என்னால் படிக்க முடியுமா.. குழந்தை பெற்றால் என்னால் படிக்க முடியுமா.. என்ற நிலைமையை முறியடித்து  படிக்கும்போதே திருமணம் செய்து, பிரசவித்த உடனே நீதிபதி தேர்வு எழுதி வென்ற ஸ்ரீபதி எல்லா பெண்களுக்கும் ஒரு ரோல் மாடலாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். ஒவ்வொரு பெண்ணும் இதுபோல உறுதி பூண வேண்டும்.. கடின உழைப்புக்கு ஈடு இணையே கிடையாது.. பெண்களுக்கு சக்தி வாய்ந்த ஆயுதம், பாதுகாப்பு படிப்பு மட்டுமே.. அதைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக சாதிக்க வேண்டும்.. சாதித்துக் காட்டிய ஸ்ரீபதி போல ஜொலிக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்