சிஎஸ்கேன்னா சும்மாவா?.. அடுத்தடுத்து அதிரிபுதிரி வெற்றி.. முதலிடத்தில் சென்னை!

Apr 24, 2023,03:13 PM IST
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அடுத்த வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் அணி புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்தில் இருந்து முதலிடத்தை எட்டி பிடித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டுவென்டி- 20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. 



236 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியின் இந்த வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன் ஏப்ரல் 21 ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. அடுத்தடுத்த வெற்றிகளால் ஐபிஎல் 2023 அணிகளின் புள்ளி விபர பட்டியலில் சென்னை அணியின் புள்ளிகள் அதிரடியாக உயர்ந்து, முதலிடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை 33 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. 

இதில் 7 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து, 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்